நற்படிப்புக்காக செபம் சகலவிதமான ஞாயானத்துக்கும் , ஊற்றும் இருப்பிடமானவரே, /உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் . /தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம், விவேகமே தூயவர்களின் அறிவு என்றும்/ ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு /அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார் என்றும் /நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் . /நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும் /அறிவிலும் சிறந்து/பக்தியும் விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக . /மதிப்புக்குரியவர்களாக படைத்து /எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர். /எங்களுடைய அறியாமையாலும் /பலவீனத்தாலும் /ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் /நாங்கள் ஞானத்திலும் அறிவிலும் /குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.