வேலை துவங்குமுன் ஜெபம்:
தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும்.
உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.
அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும்.
உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்.
அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி!
விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த
ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே.
அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும்,
அவருடைய ஆறுதலால் எப்பொழுதும்
மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும்.
இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு
கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.
வேலை முடிந்தபின் செபம்:
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே!
இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம்.
எங்கள் அவசரங்களிலும் நாங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம்
உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே
சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.
சகோதர சகோதரிகளே,
ReplyDeleteஅனைவருக்கும் மிக பயனாக இருக்கும் என கிறிஸ்துவில் நம்புகிறேன்.
With Love in Jesus
R.S.Allwin
rsallwin@yahoo.com