காணிக்கை ஜெபம்:
இயேசுவின் திரு இருதயமே!
நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப்
பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல்
உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும்
சகல கருத்துக்களுக்காகவும்,
அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும்,
கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும்,
தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின்
வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.
இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும்
குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும்
விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.
அத்தியந்த மகிமையுள்ள பரலோக
இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே
உம்முடைய திருபாதத்தை நாங்கள்
நமஸ்கரித்து இந்தச் செபமாலைத்
தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக
வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம்.
இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே
கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய
பலனை அடையவும் சுகிரேத போதனையின்
படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும்
நிவாரணமாகவும் பரலோகத்திலே
உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய
மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும்
ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்.
Comments
Post a Comment