மன்றாடுதல் ஜெபம்
கடவுளின் பரிசுத்த ஊழியர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை உறுதிப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
நாட்டு தலைவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை நேர்மையுள்ளவர்களாக விளங்கும்படி மன்றாடுகிறோம்.
துன்புறும் ஏழைகளுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை செல்வர்களாக்கும்படி மன்றாடுகிறோம்.
கொடிய பணக்காரர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை பணிவுள்ளவர்களாக் ஆகும்படி மன்றாடுகிறோம்.
கர்ப்பிணிப் பெண்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
நோயாளிகள், மரணத் தறுவாயில் உள்ளோருக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
வேலையில்லாதவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை தேற்றும்படி மன்றாடுகிறோம்.
காணாமல்போன ஆட்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்கள் தங்கள் இல்லத்திற்கு
திரும்ப வழிகாட்டும்படி மன்றாடுகிறோம்.
உள்ளம் உடைந்தவர்களுக்காக
- பரிசுத்த ஆவியே அவர்களை குணப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.
Comments
Post a Comment