பெற்றோரின் செபம்
மனுமக்களின் தந்தையே,
இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து
என் பொறுப்பில் வைத்துக் காத்து
உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய
சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே .
இந்தப் புனித ஊழியத்தையும்,
கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு
உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும் .
நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும்,
எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும் .
எப்போது கண்டிக்க வேண்டியதோ
அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க
வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக .
இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும் .
Comments
Post a Comment