தாய்மை கொண்ட பெண்கள் செபம் :
கன்னியும் தாயுமான புனித மரியாளே !
நீர் இயேசு நாதரை உமது
திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந
நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில்
அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது,
வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே !
அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப்
பார்த்து என்பேரில் கிருபையாயிரும் .
நானோ பாவத்தில் பிறந்து எல்லா
உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன் .
ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது .
ஆகையால் என் மிடிமையைப்
பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து,
என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி,
அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும் .
மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி
சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும்,
உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு,
சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின்
வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் . -ஆமென் .
Comments
Post a Comment