துன்பவேளை மன்றாட்டு
இனிய இயேசுவே ! மக்களிடையே வாழ்வதும்,
அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப்
பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி .
நம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர்
அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர் .
அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர் .
உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு,
என் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும்,
கோரிக்கைகளையும், ஏக்கங்களையும் . . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும் )
உம்மிடம் கேட்கிறேன் .
உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும் .
உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப,
என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன் .
இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து,
மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க
வேண்டும் என்று குழந்தை இயேசுவே
உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்
Comments
Post a Comment