நற்படிப்புக்காக செபம்
சகலவிதமான ஞாயானத்துக்கும் ,
ஊற்றும் இருப்பிடமானவரே,
/உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் .
/தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்,
விவேகமே தூயவர்களின் அறிவு என்றும்/
ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு
/அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார் என்றும்
/நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் .
/நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும்
/அறிவிலும் சிறந்து/பக்தியும்
விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக .
/மதிப்புக்குரியவர்களாக படைத்து
/எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள
இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர்.
/எங்களுடைய அறியாமையாலும் /பலவீனத்தாலும்
/ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும்
/நாங்கள் ஞானத்திலும் அறிவிலும்
/குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.
Comments
Post a Comment