நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்
ஓ என் இயேசுவே, என் அன்பு சினேகிதிரே!
எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து,
எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய,
உங்களின் அருளையும் ஆசிரையும்
என்மேல் பொழிந்தருளும்.
எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை
துணையை எனக்கு அனுப்பியருளும்.
என் அன்பு சினேகிதரே,
என் வாழ்க்கை துணையாய் வருபவர்
தங்களின் திரு இருதயத்தின் மேல்
பற்றும் பக்தியும் உள்ளவராக
இருக்க மன்றாடுகிறேன்.
எனது வாழ்க்கை துணை நேர்மையானவாராக,
நம்பிக்கைக்கு உரியவராக,
புனிதமானவாராக, பற்றுறுதியானவராக,
உண்மையானவராக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன்.
நாங்கள் இருவரும் ஓர் உடலாகவும் உயிராகவும்
தன்னலமற்ற எண்ணத்தோடும் இருக்கும்படி
எங்களை ஆசிர்வதியும்.
எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிள்ளைகளை
நாங்கள் பொறுப்பான பெற்றோர்களாக
வளர்க்க எங்களை ஆசிர்வதியும்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற
அன்போடும் பரிவோடும் வாழ அருள்புரியும்.
எங்களின் வருங்கால குடும்பம் தூய
திருக்குடும்பத்தின் அடையாளமாக இருக்க மன்றாடுகிறேன்.
ஓ மாசற்ற தூய அன்னையே,
எனது வாழ்க்கையை உங்கள் கரங்களில் வைக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய எனக்கு வழிகாட்டும்.
எல்லாம் வல்ல இறைவனிடம் எனக்காக மன்றாடவும்.
ஆமென்.
ஒரு பரலோக மந்திரம்
மூன்று அருள் நிறைந்த மரியே
ஒரு பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்.
Comments
Post a Comment