Skip to main content

நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்

நல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம் 

ஓ என் இயேசுவே, என் அன்பு சினேகிதிரே!
எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து,
எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய,
உங்களின் அருளையும் ஆசிரையும்
என்மேல் பொழிந்தருளும்.
எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை
துணையை எனக்கு அனுப்பியருளும்.
என் அன்பு சினேகிதரே,
என் வாழ்க்கை துணையாய் வருபவர்
தங்களின் திரு இருதயத்தின் மேல்
பற்றும் பக்தியும் உள்ளவராக
இருக்க மன்றாடுகிறேன்.
எனது வாழ்க்கை துணை நேர்மையானவாராக,
நம்பிக்கைக்கு உரியவராக,
புனிதமானவாராக, பற்றுறுதியானவராக,
உண்மையானவராக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன்.
நாங்கள் இருவரும் ஓர் உடலாகவும் உயிராகவும்
தன்னலமற்ற எண்ணத்தோடும் இருக்கும்படி
எங்களை ஆசிர்வதியும்.
எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிள்ளைகளை
நாங்கள் பொறுப்பான பெற்றோர்களாக
வளர்க்க எங்களை ஆசிர்வதியும்.
நாங்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற
அன்போடும் பரிவோடும் வாழ அருள்புரியும்.
எங்களின் வருங்கால குடும்பம் தூய
திருக்குடும்பத்தின் அடையாளமாக இருக்க மன்றாடுகிறேன்.

ஓ மாசற்ற தூய அன்னையே,
எனது வாழ்க்கையை உங்கள் கரங்களில் வைக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய எனக்கு வழிகாட்டும்.
எல்லாம் வல்ல இறைவனிடம் எனக்காக மன்றாடவும்.
ஆமென்.

ஒரு பரலோக மந்திரம்
மூன்று அருள் நிறைந்த மரியே
ஒரு பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...