பேய் ஓட்டுகிறதற்கு செபம் :
இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துராதிகளாகிய
நீங்கள் அகன்று போகக்கடவீர்கள் .
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின்
சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார் . அல்லேலூயா !
நரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே !
இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய
வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள்
எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல்
துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும்
நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் . - ஆமென்
Comments
Post a Comment