உணவருந்துமுன் ஜெபம்:
சர்வேசுரா சுவாமி!
என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும்
இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப்
பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்.
உணவருந்திய பின் ஜெபம்:
சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா!
தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்;
எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும்
தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.
இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய
திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.
ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி!
எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம்
நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள
அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த
விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது –ஆமென்
Comments
Post a Comment