Skip to main content

Posts

Showing posts from May, 2012

Did you ever talk to God above? Lyrics

Did you ever talk to God above? Did you ever talk to God above? Tell Him that you need a friend to love. Pray in Jesus’ name believing that God answers prayer. Have you told Him all your cares and woes? Ev’ry tiny little fear He knows. You can know He’ll always hear And He will answer prayer. You can whisper in a crowd to Him. You can cry when you’re alone to Him. You don’t have to pray out loud to Him; He knows your thoughts. On a lofty mountain peak, He’s there. In a meadow by a stream, He’s there. Anywhere on earth you go, He’s been there from the start. Find the answer in His Word; it’s true. You’ll be strong because He walks with you. By His faithfulness He’ll change you, too. God answers prayer. Jesus loves the little children Jesus loves the little children All the children of the world Black and yellow, red and white They're all precious in His sight Jesus loves the little children of the world Whether you're rich or whether you're poor It...

விசுவாசப் பிரமாணம்-கத்தோலிக்க முறைப்படி

விசுவாசப் பிரமாணம்-கத்தோலிக்க முறைப்படி  பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு  பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து  சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.

அன்பே இறை அன்பே-Anbe irai Anbe Lyrics

அன்பே இறை அன்பே   அன்பே இறை அன்பே  உயர்ந்தது உலகில் சிறந்தது அன்பே அன்பே உயர்ந்தது இறை அன்பே உலகில் சிறந்தது - 2 அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத்தந்த - அவர் அன்பே உலகில் சிறந்தது - 2 1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி - 2 அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2 2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே - 2 அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2

அன்பே என்றானவா என் எண்ணம்-Anbe entraanava en ennam Lyrics

அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா  அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா  உன் மேன்மை வானம் என்றாகினாலும் என் ஏழ்மை குறை தீர்த்தவா - 2 1. வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில் வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய் பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில் எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய் மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2 என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2 2. உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன் உன் நெஞ்சமலராலே எனை மூடினாய் கண் பார்வை அருள் போதும் என நாடினேன் என் பாதை வழி செல்லும் துணையாகினாய் மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2 என்மீது நீ வந்து நானாகிறாய் - 2

அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய்-Anudhina unavaai enathullam Lyrics

அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய்  அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய் - 2  அன்பின் நற்கருணையே இயேசுவே ஆன்மாவின் உயிருணவே - 2 1. உயிருள்ள உந்தன் இரத்தமும் தசையும் என்னுயிர் உடலினில் கலந்திட - 2 என்னை இயக்கிட வாழ்வேன் சிறந்து உந்தன் அருளால் நாளும் நிறைந்து - 2 2. உண்ணும் உணவாய் மாறுவதனால் உன்னையே உண்பேன் உவந்து நான் - 2 உன்னைப் போல ஒளிர்வேன் உயர்ந்து உருகும் மெழுகாய் என்னை அளித்து - 2 3. நலன் கெட வைக்கும் சுயநல வேட்கை தணிந்திடச் செய்யும் வானமுதே - 2 பணிந்து அழைத்தேன் வாருமே பிறர்நலம் காக்க உதவுமே - 2

வானம் பொழிந்திட வேண்டும்-Vaanam Pozhinthida vendum Lyrics

வானம் பொழிந்திட வேண்டும்   வானம் பொழிந்திட வேண்டும்  செல்வமெல்லாம் புவியில் பெருகிட வேண்டும் நீதியும் அன்பும் நிலைத்திட வேண்டும் இறைவனின் அரசு மலர்ந்திட வேண்டும் ஆண்டவரே தாவீதின் திருமகனே கேட்பதை தாரும் இயேசய்யா நாங்கள் கேட்பதை தாரும் இயேசய்யா - 2 1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின் வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா - 2 சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா - 2 பொய்மை அழிந்து உண்மை மலர பாசம் மலர்ந்து உறவு பிறக்க - 2 உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே 2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம் கலங்கரை தீபம் நீயாக வா - 2 ஏழ்மையெனும் பிடியில் வாடும் மாந்தருக்கெல்லாம் ஏற்றம் காண வழியை சொல்லும் இயேசு ராஜனே - 2 நன்மை நிறைந்து நீதி நிலைக்க வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2 உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே

ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்-Aathumame ne vaazhthiduvaai Lyrics

ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்  ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்  ஆண்டவராம் உந்தன் இறைவனையும் ஏனெனில் அவரே பெரியவரே அழகின் மகத்துவம் நிறைந்தவரே 1. வானத்தின் விரிவே கூடாரம் மேகங்கள் அவர் வரும் ரதமாகும் ஒளியே அவரது ஆடைகளாம் - அங்கு சுடர்விடும் நெருப்பவர் தூதர்களாம் - அதனால் 2. பூமியின் படைப் பவர் எழில் முகமாம் ஆழ்கடல் அமைப்பும் அவர் செயலாம் கனலும் நீரும் அவர்க்கடங்கும் - அந்த கதிதரும் காற்றும் அவர்க்கடங்கும் - அதனால் 3. மலைகளின் பள்ளத்தாக்குகளில் வழிந்தோடும் நீர் அருவிகளில் மான்களும் பறவை விலங்குகளும் வந்து பருகிடும் எழில் அவர் திருவுடலாம் - அதனால் 4. பூமியை தொடுவார் அது அதிரும் மலைகளைத் தொடுவார் அது அதிரும் தமதரும் படைப்பில் அவர் மகிழ்வார் - என் உயிருள்ளவரை அவர் புகழ் இசைப்பேன் - எனவே

ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்-Aayiram piravigal Naan Lyrics

ஆயிரம் பிறவிகள் நான்  ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்  உன்னுடலை சுவைத்திட போதாதய்யா என் இயேசுவே என் தெய்வமே ஏழையின் உணவாய் வந்தவரே - 2 வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2 1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை எரிந்திடும் தீபம் நீதானய்யா - என்றும் அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம் கேட்டிட எழுவதும் நீதானய்யா - 2 எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா... 2. துணை ஏதும் இன்றி வாடிடும் நேரம் அருட்கரம் தருவதும் நீதமானய்யா நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போது(ம்) அருகினில் இருப்பதும் நீதானய்யா - 2 எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய் பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா...

ஆன்ம உணவாய் எனில் வந்து-Aanma unavaai ennil vanthu Lyrics

ஆன்ம உணவாய் எனில் வந்து  ஆன்ம உணவாய் எனில் வந்து  அன்பு உறவில் எனை வளர்த்து அந்தம் வரையில் என்னைக் காக்க ஆதவனே உனை வேண்டுகிறேன் - உன் ஆதரவையே நாடுகிறேன் - 2 1. அச்சம் யாவும் நீக்கும் மருந்தாம் அல்லல் யாவும் போக்கும் மருந்தாம் நித்தம் உந்தன் உணவையே நான் உண்ணும் வேளையில் உள்ளம் ஒன்றிப் போகுமே உறவில் உள்ளம் மகிழ்ந்திடுமே வருவாயே என் இறைவா வரம் அருள்வாயே என் தலைவா - 2 2. தாகம் யாவும் தணிக்கும் விருந்தாம் தளர்ச்சி யாவும் நீக்கும் விருந்தாம் நித்தம் உந்தன் குருதியை நான் பருகிடும் போதிலே உள்ளம் உருகிப் போகுமே ஊக்கம் நெஞ்சில் பிறந்திடுமே வருவாயே...

ஆனந்த மழையில் நானிலம் மகிழ -Aanantha mazhaiyil naanilam magizha Lyrics

ஆனந்த மழையில் நானிலம் மகிழ ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2  ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ அவனியை மாற்றிடும் அருட்கடலோ 1. மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான் விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2 இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே பண்பாடவோ என்றும் கொண்டாவோ மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3 2. சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2 எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன் பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன் - மலர்கின்ற...

இசை ஒன்று இசைக்கின்றேன்-Isai ontru isaikkintren Lyrics

இசை ஒன்று இசைக்கின்றேன்    இசை ஒன்று இசைக்கின்றேன்  இறைவா எளிய நல்குரல் தனிலே - 2 என் இதயத் துடிப்புக்களோ - என் இசையின் குரலுக்குத் தாளங்களே - 2 1. காலத்தின் குரல்தனில் தேவா - உன் காலடி ஓசை கேட்கின்றது - 2 ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே 2. ஏழையின் வியர்வையில் இறைவா - உன் சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2 சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே-Idhaya amaithi perugintrom Lyrics

 இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே   இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே  இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே மனதில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே 1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே பெருகும் கண்ணீர் உலர்ந்திடும் இறைவன் கருணைக் கரத்திலே 2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே 3. ஆயன் உலகில் கிறிஸ்துவே அவர் தம் ஆட்டுக்கிடையிலே புனித வாழ்வு அடையவே புசிக்கத் தந்தார் உடலையே

இதயக் கதவைத் திறந்து வைத்தேன்-Idhaya kadhavai thiranthu vaithen Lyrics

இதயக் கதவைத் திறந்து வைத்தேன்  இதயக் கதவைத் திறந்து வைத்தேன்  இனிமை நிறைக்கும் இயேசுவே உதயம் தேடும் நேரமெல்லாம் உந்தன் உறவை நாடுவேன் இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 1. ஏழை மனிதரில் உன் முகம் காணவே ஏங்கிடும் இதயத்தில் உன்னருள் நிறைக்கவே உண்மை அன்பு மாண்பு ஓங்கிட உந்தன் அன்பில் தியாகம் ஆகுவேன் புதிய அன்புவெள்ளம் எங்கும் பொங்கிப் பாயும் நேரமே புதிய உலகம் மலருமே இறைவன் அரசும் வளருமே 2. நீதி தேடிடும் அன்பின் பணியிலே சமத்துவ உறவினைச் சத்தியமாக்குவேன் மனிதநேயம் காக்கும் பொறுப்பிலே புனிதப் பயணம் தினமும் செல்லுவேன் நீதி நேர்மை உணர்வு கொண்டு இறைவன் வழியை நாடுவேன் புதிய உலகம் காணுவேன் இறைவன் அரசில் வாழுவேன்

அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே

அமைதியின் தெய்வமே இறைவா   அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே  அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி   அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2 1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி   தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி - 2   அன்பு மொழியை விதைத்திடுவோர்   அருளின் பயிரை அறுத்திடுவார் - 2 அமைதி.... 2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி   உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி   ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்   வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் - 2 அமைதி....

அமைதி தேடி அலையும் நெஞ்சமே - Amaithi Thedi alaiyum nenjame Lyrics

அமைதி தேடி அலையும் நெஞ்சமே  அமைதி தேடி அலையும் நெஞ்சமே  அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2   நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2   அவரின்றி வேறில்லையே 1. போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்   என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2   காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து   அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2 2. இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்   நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2   பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்   என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2

அன்பனே விரைவில் வா உன் அடியேனைத் தேற்ற வா

அன்பனே விரைவில் வா உன்  அடியேனைத் தேற்ற வா அன்பனே விரைவில் வா உன் அடியேனைத் தேற்ற வா 1. பாவச் சுமையால் பதறுகிறேன்   பாதை அறியாது வருந்துகிறேன் - 2   பாதை காட்டிடும் உன்னையே நான் - 2   பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்   அருளை அளிக்க வேண்டுகிறேன் - 2   வாழ்வில் உணவே உன்னையே நான் - 2   வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்   இதயம் நொந்து அழுகிறேன் - 2   ஒளியாய் விளங்கும் உன்னையே நான் - 2   வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன் 4. ஏழ்மை நிலையில் இருக்கிறேன்   என்பு உருகிக் கிடக்கிறேன் - 2   வாழ்வின் விளக்கே உன்னையே நான் - 2   வாழ்வின் துணையாய் பெறுகிறேன்