ஆன்ம உணவாய் எனில் வந்து
ஆன்ம உணவாய் எனில் வந்து
அன்பு உறவில் எனை வளர்த்து
அந்தம் வரையில் என்னைக் காக்க
ஆதவனே உனை வேண்டுகிறேன் - உன்
ஆதரவையே நாடுகிறேன் - 2
அல்லல் யாவும் போக்கும் மருந்தாம்
நித்தம் உந்தன் உணவையே நான்
உண்ணும் வேளையில் உள்ளம் ஒன்றிப் போகுமே
உறவில் உள்ளம் மகிழ்ந்திடுமே
வருவாயே என் இறைவா வரம் அருள்வாயே என் தலைவா - 2
தளர்ச்சி யாவும் நீக்கும் விருந்தாம்
நித்தம் உந்தன் குருதியை நான் பருகிடும் போதிலே
உள்ளம் உருகிப் போகுமே
ஊக்கம் நெஞ்சில் பிறந்திடுமே வருவாயே...
Comments
Post a Comment