ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆண்டவராம் உந்தன் இறைவனையும்
ஏனெனில் அவரே பெரியவரே
அழகின் மகத்துவம் நிறைந்தவரே
மேகங்கள் அவர் வரும் ரதமாகும்
ஒளியே அவரது ஆடைகளாம் - அங்கு
சுடர்விடும் நெருப்பவர் தூதர்களாம் - அதனால்
ஆழ்கடல் அமைப்பும் அவர் செயலாம்
கனலும் நீரும் அவர்க்கடங்கும் - அந்த
கதிதரும் காற்றும் அவர்க்கடங்கும் - அதனால்
வழிந்தோடும் நீர் அருவிகளில்
மான்களும் பறவை விலங்குகளும் வந்து
பருகிடும் எழில் அவர் திருவுடலாம் - அதனால்
மலைகளைத் தொடுவார் அது அதிரும்
தமதரும் படைப்பில் அவர் மகிழ்வார் - என்
உயிருள்ளவரை அவர் புகழ் இசைப்பேன் - எனவே
Comments
Post a Comment