வானம் பொழிந்திட வேண்டும்
வானம் பொழிந்திட வேண்டும்
செல்வமெல்லாம் புவியில் பெருகிட வேண்டும்
நீதியும் அன்பும் நிலைத்திட வேண்டும்
இறைவனின் அரசு மலர்ந்திட வேண்டும்
ஆண்டவரே தாவீதின் திருமகனே கேட்பதை தாரும் இயேசய்யா
நாங்கள் கேட்பதை தாரும் இயேசய்யா - 2
வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா - 2
சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே
உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா - 2
பொய்மை அழிந்து உண்மை மலர பாசம் மலர்ந்து உறவு பிறக்க - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
கலங்கரை தீபம் நீயாக வா - 2
ஏழ்மையெனும் பிடியில் வாடும் மாந்தருக்கெல்லாம்
ஏற்றம் காண வழியை சொல்லும் இயேசு ராஜனே - 2
நன்மை நிறைந்து நீதி நிலைக்க வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
Comments
Post a Comment