ஆயிரம் பிறவிகள் நான்
ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்
உன்னுடலை சுவைத்திட போதாதய்யா
என் இயேசுவே என் தெய்வமே ஏழையின் உணவாய் வந்தவரே - 2
வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2
எரிந்திடும் தீபம் நீதானய்யா - என்றும்
அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்
கேட்டிட எழுவதும் நீதானய்யா - 2
எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே
சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா...
அருட்கரம் தருவதும் நீதமானய்யா
நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போது(ம்)
அருகினில் இருப்பதும் நீதானய்யா - 2
எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்
பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா...
Comments
Post a Comment