Skip to main content

Posts

Showing posts from November, 2011

சாலேமின் ராசா, சங்கையின் ராசா -Saalemin raasa sangaiyin raasa Lyrics

சாலேமின் ராசா , சங்கையின் ராசா  சாலேமின் ராசா, சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் - இந்த தாரணி மீதினில் ஆளுகை செய்திட சடுதி வாருமேன்  சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன செல்வக் குமாரனே - இந்த சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற சேதி கேளீரோ?  எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண் பூத்துப் போகுதே;- நீர் சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே  நங்கை எருசலேம் பட்டினம் உம்மை நாடித் தேடுதே ; - இந்த நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள் தேடிவாடுதே சாட்சியாக சுபவிசேஷம் தாரணிமேவுதே; - உந்தன் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்

உன்னதத்தின்   தூதர்களே   ஒன்றாகக்   கூடுங்கள்   உன்னதத்தின்   தூதர்களே   ஒன்றாகக்   கூடுங்கள் மன்னன்   இயேசு   நாதருக்கே   வான்முடி   சூட்டுங்கள் ராஜாதி   ராஜன்   இயேசு   இயேசு   மகாராஜன்  -  அவர் ராஜ்ஜியம்   புவியெங்கும்   மகா   மாட்சியாய்   விளங்க அவர்   திரு   நாமமே   விளங்க  - (2 ) அல்லேலூயா   அல்லேலூயா   அல்லேலூயாவே அல்பா   ஒமேகா   அவர்க்கே   அல்லேலூயாவே   நாலா   தேசத்திலுள்ளோரே   நடந்து   வாருங்கள் மேலோக   நாதருக்கே   மெய்முடி   சூட்டுங்கள்   இயேசுவென்னும்   நாமத்தையே   எல்லாரும்   பாடுங்கள் ராஜாதிராஜன்   தலைக்கு   நன்முடி   சூட்டுங்கள்   சகல   கூட்டத்தார்களே   சாஷ்டாங்கம்   செய்யுங்கள் மகத்துவ   ராசரிவரே   மாமுடி   சூட்டுங்கள்

பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி -Bethlehem oororam sathirathai thedi Lyrics

பெத்தலேகேம்   ஊரோரம்   சத்திரத்தை   நாடி   பெத்தலேகேம்   ஊரோரம்   சத்திரத்தை   நாடி கர்த்தர்   இயேசு   பாலனுக்கு   துத்தியங்கள்   பாடி பக்தியுடன்   இத்தினம்   வா   ஓடி   காலம்   நிறைவேறின   போதிஸ்திரியின்   வித்து சீலகன்னி   கர்ப்பத்திலே   ஆவியால்   உற்பவித்து பாலனான   யேசு   நமின்   சொத்து   வான்   புவி   வாழ்   ராஜனுக்கு   மாட்டகம்   தான்   வீடோ வானவர்க்கு   வாய்த்த   மெத்தை   வாடின   புல்   பூடோ ஆன   பழங்கந்தை   என்ன   பாடோ அந்தரத்தில்   பாடுகின்றார்   தூதர்   சேனை   கூடி மந்தை   ஆயர்   ஓடுகின்றார்   பாடல்   கேட்கத்   தேடி இன்றிரவில்   என்ன   இந்த   மோடி   ஆட்டிடையர்   அஞ்சுகிறார்   அவர்   மகிமை   கண்டு அட்டியின்றி   காபிரியேல்   சொன்ன   செய்தி   கொண்டு நாட்டமுடன்   ரட்சகரைக் ...

ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு -Aa ambara umbaramum pugalthiru Lyrics

ஆ   அம்பர   உம்பர   மும்   புகழுந்திரு   ஆ   அம்பர   உம்பர   மும்   புகழுந்திரு ஆதிபன்   பிறந்தார்   ஆதிபன்   பிறந்தார்  -  அமலாதிபன்   பிறந்தார்   அன்பான   பரனே   அருள்   மேவுங்   காரணனே  -  நவ அட்சய   சச்சித   ரட்சகனாகிய உச்சித   வரனே   ஞானியர்   தேட   வானவர்   பாட   மிக நன்னய   உன்னத   மன்னரும்   ஏசையா இன்னிலம்   பிறந்தார்

வானம் பூமியோ பராபரன் -Vaanam poomiyo paraabaran Lyrics

வானம்   பூமியோ   பராபரன்   வானம்   பூமியோ   பராபரன் மானிடன்   ஆனாரோ   என்ன   இது   ஞானவான்களே   நிதானவான்களே   பொன்னகரத்தாளும்   உன்னதமே   நீளும் பொறுமைக்   கிருபாசனத்துரை பூபதி   வந்ததே   அதிசயம்  -  ஆ   என்ன   இது   மந்தைக்   காட்டிலே   மாட்டுக்   கொட்டிலிலே கந்தைத்   துணியைப்   பொதிந்த   சூட்சி நிந்தைப்   பாவிகள்   சொந்தக்   கண்   காட்சி  -    ஆ   என்ன   இது   வேறே   பேரல்ல   சுரர்   விண்ணவர்   யாருமல்லர் மாறில்லாத   ஈறில்லாத வல்லமை   தேவனே   புல்லில்   கிடக்கிறார்  -  ஆ   என்ன   இது   சீயோன்   மாதே   இனி   கணம்   தரியாதே மாயமென்னவோ   உனக்குச்   சொல்லவோ வந்தவர்   மணவாளனல்லவோ  -  ஆ   என்ன   இது

தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா -Thanga sudare vaa engal uyire vaa Lyrics

தங்கச்சுடரே   வா   எங்கள்   உயிரே   வா   தங்கச்சுடரே   வா   எங்கள்   உயிரே   வா மரியின்   மகனே   வா   மண்ணில்   வாழவா   பேரின்ப   நாள்   இந்த   நாள்   விண்ணிலே இயேசு   தெய்வம்   வந்த   நாள்   மண்ணிலே   பாலைவனப்   பறவைகள்   போல் மக்கள்   வாடி   நிற்கும்   வேளையிலே ஒளியாக   வந்தாய்   வரம்   கோடி   தந்தாய் விண்   வார்த்தை   நீயல்லவோ அருள்   வெள்ளம்   சுரந்தோட   பூபாளங்கள்   முழங்கிடுதே

சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து -Samathaanam otthum yesu christu Lyrics

சமாதானம்   ஓதும்   இயேசு   கிறிஸ்து   சமாதானம்   ஓதும்   இயேசு   கிறிஸ்து இவர்   தாம்   இவர்   தாம்   இவர்   தாம்   இவர்   தாம்   நமதாதி   பிதாவின்   திருப்   பாலரிவர் அனுகூலரிவர்   மனுவேலரிவர்   நேய   கிருபையின்   ஓர்   சேயர்   இவர் பரம   ராயர்   இவர்   நம   தாயரிவர்   ஆதி   நரர்   செய்த   தீதறவே அருளானந்தமாய்   அடியார்   சொந்தமாய்   ஆரணம்   பாடி   விண்ணோர்   ஆடவே அறிஞோர்   தேடவே   இடையோர்   கூடவே   மெய்யாகவே   மேசையாவுமே நம்மை   நாடினாரே   கிருபை   கூறினாரே   அருளானந்த   மோட்ச   வழி   காட்டினாரே நிலை   நாட்டினாரே   முடி   சூட்டினாரே

ஆதித் திருவார்த்தை திவ்விய -Aathi thiruvaarthai thivviya Lyrics

ஆதித்   திருவார்த்தை   திவ்விய   ஆதித்   திருவார்த்தை   திவ்விய அற்புத   பாலனாகப்    பிறந்தார் ஆதந்   தன்   பாவத்தின்   சாபத்தை   தீர்த்திட ஆதிரையோரையீ   டேற்றிட   மாசற்ற   ஜோதி   திரித்துவத்   தோர்   வஸ்து மரியாம்   கன்னியடமுதித்து மகிமையை   மறந்து   தமை   வெறுத்து மனுக்குமாரன்   வேஷமாய் உன்ன   தகஞ்சீர்   முகஞ்சீர்   வாசகர் மின்னுஞ்சீர்   வாசகர்   மேனி   நிறம்   எழும் உன்னத   காதலும்   பொருந்தவே   சர்வ நன்மை   சொரூபனார்   ரஞ்சிதனார் தாம்   தாம்   தன்னர   வன்னர தீம்   தீம்   தீமை   அகற்றிட சங்கீர்த   சங்கீர்த   சங்கீர்த   சந்தோ ஷமென   சோபனம்   பாடவே இங்கிர்த   இங்கிர்த   இங்கிர்த   நமது இருதயத்திலும்   எங்கும்   நிறைந்திட   ஆதாம்   ஓதி   ஏவினர்   ஆபிரகாம்   விசுவாசவித்து யூதர்   சிம்மாசனத்தாளுகை ...

அதிகாலையில் பாலனைத் தேடி -Athikaalaiyil baalaganai thedi Lyrics

அதிகாலையில்   பாலனைத்   தேடி   அதிகாலையில்   பாலனைத்   தேடி செல்வோம்   நாம்   யாவரும்   கூடி - அந்த மாடடையும்   குடில்   நாடி தேவபாலனைப்   பணிந்திடப்   பாடி வாரீர்   வாரீர்   வாரீர்   நாம்   செல்வோம்  அன்னை   மரியின்   மடி   மேலே மன்னன்   மகவாகவே   தோன்ற   -   விண் பதூதர்கள்   பாடல்கள்   பாட விரைவாக   நாம்   செல்வோம்   கேட்க  மந்தை   ஆயர்கள்   யாவரும்   அங்கே அந்த   முன்னணை   முன்னிலை   நின்றே   -   நம் சிந்தை   குளிர்ந்திட   போற்றும் நல்ல   காட்சியைக்   கண்டிடலாமே  அன்பின்   வடிவாய்ப்   புவி   மீதில் அருளானந்தம்   ஈந்திடவென்றே தந்தைப்   பரனின்   திருமைந்தன் தம்மைத்   தாழ்த்திய   விந்தையைப்   பாடி