வானம் பூமியோ பராபரன்
மானிடன் ஆனாரோ என்ன இது
ஞானவான்களே நிதானவான்களே
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது
மாறில்லாத ஈறில்லாத
வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது
மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது
Comments
Post a Comment