பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தர் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
சீலகன்னி கர்ப்பத்திலே ஆவியால் உற்பவித்து
பாலனான யேசு நமின் சொத்து
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
சந்த்ரந் தூபம் போளம் வைத்து சுதனை பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே
Comments
Post a Comment