சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
செல்வக் குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
நாடித் தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
தாரணிமேவுதே; - உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே
Comments
Post a Comment