Skip to main content

சிலுவையில் அறையுண்ட ஏசுவே - Siluvaiyil Araiyunda Yesuve Lyrics

சிலுவையில் அறையுண்ட ஏசுவே
/heartசிலுவையில் அறையுண்ட ஏசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன்
என் பாவ சுமைகளோடு
உம் பாத நிழலில் நிற்கின்றேன்

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

/heartதந்தையே இவர்களை மன்னியும் 
அறியாமல் செய்தார்கள் என்றீர் 
மாறாத இரக்கத்தால் என்னை 
மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே 


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே


/heartஅம்மா இதோ உம் மகன் என்றீர் 
இதுவும் தாய் என்றே நேசத்தால் 
அன்னையின் அன்பினில் நாளுமே 
என்னையும் வாழ்ந்திட செய்யுமே 


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

/heartதாகமாய் உள்ளதே இறைவா 
ஏன் என்னை கை விட்டீர் என்றீரே 
கைவிடா நேசத்தால் எனக்கும் 
பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே 


ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

/heartதந்தையே உமது கையில் 
என் ஆவியை ஒப்படைக்கின்றேன் 
என்னையே உமது கரத்தில் 
முற்றிலும் கையளிக்கின்றேன் 

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே


Video:

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...