Skip to main content

உன்னதங்களிலே இறைவனுக்கு - Unnathangalile Iraivanukku Lyrics



உன்னதங்களிலே இறைவனுக்கு

/heartஉன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக!

/heartபுகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே!
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்.


/heartஉமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே!


/heartஆற்றல் அனைத்தும் கொண்டு
இலங்கும்தேவ தந்தை இறைவனே!
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே!


/heartஆண்டவராம் எம் இறைவனே!
இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்!


/heartஉலகின் பாவம் போக்குபவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!


/heartதந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே. - ஆமென்! 

Comments

  1. Please Pray For Me Dear Brother or Sister Because i am in Suffering So Many Problems In my Family and Also my Personal Life Please Help Me And ....

    ReplyDelete
  2. Jesus is your eternal father Bro. You can pray for urself. There is no mediator between u and ur father. Praise the Lord Bro.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: