Skip to main content

கூராணி தேகம் பாய-Koorani Thegam Paaya Lyrics



கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்


கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...  
பிதாவே இவர்கட்கு  மன்னிப்பீரே என்றார்...

தம்  ரத்தம் சிந்தினோரை நல் நேசர்  நிந்தியார்...
மாதேவ  நேசத்தோடு  இவ்வாறு ஜெபித்தார்... 

"பிதாவே இவர்களை மன்னியும்,
தாங்கள் செய்வது  என்னவென்று அறியாது இருக்கிறார்களே"

எனக்கே அவ் ரூபம் எனக்கே அச் ஜெபம் 
அவ்விதம் மன்னிப்பை எனக்கும் அருளும் 

" இன்றைக்கு நீ என்னுடன் கூட பரதேஸில்  இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச்  சொல்லுகிறேன் ; 
ஸ்திரீயே இதோ உன் மகன் , சீடனே அதோ உன் தாய்"

நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை...
கடாவினேன் ஏசுவே நான் உம் கூராணியை...

"என் தேவனே என் தேவனே 
ஏன் என்னைக் கை விட்டீர்"

ஆ இன்ப நேசா ஆவி ஆ திவ்ய உருக்கம்...
சிந்தித்து அறியாமல் செய் பாவம் மன்னியும்...

"தாகமாய் இருக்கிறேன்...முடிந்தது"



கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...  
பிதாவே இவர்கட்கு  மன்னிப்பீரே என்றார்...

"பிதாவே உம் கரங்களில் 
என்  ஆவியை ஒப்படைக்கிறேன்"



Video:

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: