கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்
கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...
பிதாவே இவர்கட்கு மன்னிப்பீரே என்றார்...
தம் ரத்தம் சிந்தினோரை நல் நேசர் நிந்தியார்...
மாதேவ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார்...
"பிதாவே இவர்களை மன்னியும்,
தாங்கள் செய்வது என்னவென்று அறியாது இருக்கிறார்களே"
எனக்கே அவ் ரூபம் எனக்கே அச் ஜெபம்
அவ்விதம் மன்னிப்பை எனக்கும் அருளும்
" இன்றைக்கு நீ என்னுடன் கூட பரதேஸில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் ;
ஸ்திரீயே இதோ உன் மகன் , சீடனே அதோ உன் தாய்"
நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை...
கடாவினேன் ஏசுவே நான் உம் கூராணியை...
"என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கை விட்டீர்"
ஆ இன்ப நேசா ஆவி ஆ திவ்ய உருக்கம்...
சிந்தித்து அறியாமல் செய் பாவம் மன்னியும்...
"தாகமாய் இருக்கிறேன்...முடிந்தது"
கூராணி தேகம் பாய மாவேதனைப் பட்டார்...
பிதாவே இவர்கட்கு மன்னிப்பீரே என்றார்...
"பிதாவே உம் கரங்களில்
என் ஆவியை ஒப்படைக்கிறேன்"
Video:
Comments
Post a Comment