Skip to main content

விசுவாசமுள்ள ஜெபம் - Visuvaasamulla Jebam


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 நவம்பர் மாதம் 28-ம் தேதி - திங்கள் கிழமை
விசுவாசமுள்ள ஜெபம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. - (யாக்கோபு 5:16).
ஜேம்ஸ் கோல்ட் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் தன் வியாபார காரியமாக நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல் நகருக்கு போய் விட்டு திரும்பும்போது, வந்த வழியே திரும்ப அவருக்கு மனமில்லை. ஆகவே அமெரிக்காவின் தென் பகுதியை சுற்றி பார்த்து விட்டு போக எண்ணி இரயில் ஏறினார். டெக்சாஸ் மாகாணத்தில் வரும்போது ஓர் இடத்தில் எஞ்சினில் கோளாறு ஏறுபட்டு இரயில் நிறுத்தப்பட்டது. இரயில் ஓட்டுனர், 'எஞ்சினை சரி செய்ய குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகும். ஆகவே பயணிகள் விரும்பினால் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று இளைப்பாறி வரலாம்' என்றார்.
.
நேரத்தை செலவழிப்பதற்காக ஜேம்ஸ் கோல்ட் பக்கத்து கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு மைதானத்தில் ஒரு கூட்ட மக்களுக்கு முன் ஒருவர் ஏலம் கூறி கொண்டிருந்தார். கோல்ட், 'இங்கு என்ன ஏலம் விடப்படுகிறது?' என்று விசாரித்தார். அப்போது ஒருவர் பக்கத்திலிருந்த கிறிஸ்தவ ஆலயத்தை காட்டி, 'இந்த கோயிலைத்தான் ஏலம் விடுகிறார்கள். ஏலம் விடுபவர்தான் இதை கட்டிய கான்ட்ராக்டர். தனக்கு சேர வேண்டிய பணம் கொடுக்கப்படாததால் கோயிலை ஏலத்துக்கு கொண்டு வந்து விட்டார். கோயில் நிர்வாகிகளும் மற்றும் சிலரும் ஆலயத்திற்குள் ஜெபம் செய்து கொண்டிருக்கின்றனர்' என்றார். கோல்ட் ஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஒரு சிறு கூட்டத்தினர் கண்ணீரோடு கதறி ஜெபித்து கொண்டிருந்தனர். 'கர்த்தரே இதை ஏலம் எடுப்பவரிடமிருந்து சிறிது காலத்திற்குள் நாங்கள் பணத்தை செலுத்தி மீட்டு கொள்ள எங்களுக்கு வழியை திறந்தருளும்' என்று ஜெபித்து கொண்டிருந்தனர். அதை கண்ட கோல்ட், ஏலம் விடும் இடத்திற்கு சென்று பெரும் தொகையை கூறி ஏலத்திற்கு அந்த ஆலயத்தை எடுத்தார். ஒரு வழக்கறிஞரை அழைப்பித்து, அவரையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து, ஆலயத்தை அச்சபைக்கு சொந்தமானதாக எழுதி, பத்திரத்தை நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டு, மணியை பார்த்தார். இரயில் ஓட்டுனர் சொன்ன நேரம் நெருங்கி கொண்டிருந்தது. தேவன் தனக்கு இவ்வழியே வர விருப்பம் தந்ததையும், இரயிலின் கோளாறையும் எண்ணி அதிசயித்தார். தேவனுடைய வல்லமையை எண்ணி வியந்தார்.
.
பிரியமானவர்களே, நீங்கள் விசுவாசத்தோடு ஜெபித்து கொண்டிருக்கும் காரியம் என்ன? நீங்கள் வேண்டி கொண்டிருக்கும் காரியத்தில் தேவன் இன்றே பதில் கொடுப்பார். உங்கள் வாழ்வில் அற்புதம் நடைபெற எந்த வழியும் இல்லாதிருக்கலாம், பணபலமும் ஆள்பலமும் இல்லாதிருக்கலாம், சாதகமற்ற சூழ்நிலைகளே காணப்படலாம், அன்று ஒரு காகத்தை கொண்டு எலியாவின் தேவையை சந்தித்தவர் இன்றும் உங்களுக்கு உதவும்படி ஒருவரை அனுப்புவார். ஏனெனில் விசுவாசமுள்ள ஜெபம் ஒருபோதும் சாவதில்லை. அந்த ஜெபம் நிச்சயமாய் தேவனிடமிருந்து பதிலை பெற்று வரும். ஆகவே உங்கள் ஜெபத்திற்கு நிச்சயமாய் பதிலுண்டு. சோர்ந்து போகாதிருப்போம்.
.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது என்ற வசனத்தின்படி, நாம் நீதிமான்களாயிருந்து செய்யும் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாய், தேவனிடத்திலிருந்து பதிலை பெற்று தரக்கூடியதாக உள்ளது. தானியேல் ஜெபித்தபோது அவன் வேண்டி கொள்ள தொடங்கியபோதே பதிலை ஆண்டவர் அனுப்பிவிட்டார். அப்படிப்பட்டதான ஜெபங்களாக நம் ஜெபங்கள் இருக்கும்படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
ஊக்கத்துடனே ஓர் முகமாய்

வாக்குத்தத்தத்தை பற்றிக் கொண்டு

நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி

கேட்கும்படி கிருபை செய்யும்
..
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

ஜெபமே ஜீவன், ஜெபம் ஜெயம்

ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

.
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பதிலை பெற்று கொள்வோம் என்று விசுவாசத்தோடு நாங்கள் ஜெபிக்கும்படியாக கிருபை தாரும். நாங்கள் ஜெபித்து உம்மிடமிருந்து பெரிய காரியங்களை பெற்று கொள்ள கிருபை தாரும். ஏனெனில் எங்கள் ஜெபங்கள் வெறுமனே திரும்பி வருவதில்லையே. சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து பெரிய காரியங்களை பெற்று கொள்ள கற்றுதாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் என்று வாக்குதத்தம் செய்த தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டி கொள்கிறோம்.
..
சகோதரி உஷா பிஜூ அவர்களின் மூத்த சகோதரனின்குடிப்பழக்கத்திலிருந்து அவருக்கு விடுதலை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவரது வாழ்வை கெடுக்கும் அந்த பழக்கத்திலிருந்து தேவரீர் அவரை விடுவிப்பீராக. மற்ற சகோதரனுக்கு ஏற்ற துணையை தேவன் தாமே வெளிப்படுத்தி கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ரோஸரி அவர்களின் சகோதரன் ஜெயபாலன் அவர்களுக்கு அட்வான்ஸ்ட் லங் கேன்சர் என்று சொல்லியிருப்பதால், அவருடைய சுகத்திற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, தேவரீர் தாமே தொட்டு சுகப்படுத்துவீராக. தேவையான பொருளாதார வசதிகளை தேவன் சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி யமுனா கேரலின் அவர்கள் நாளையிலிருந்து பிராஜக்ட் வேலை செய்ய இருப்பதால், சரியான முறையில் செய்து முடிக்க கிருபை செய்வீராக. அவர் எழுதிய பரிட்சையில் திருத்துபவர்களின் கண்களில் தயவு கிடைக்கவும், நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் தேவன் தாமே கிருபை செய்வீராக.
..
எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: