Skip to main content

சாத்தானின் தந்திரங்கள்-Saatthaanin thanthirangal


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 நவம்பர் மாதம் 21-ம் தேதி - திங்கள் கிழமை
சாத்தானின் தந்திரங்கள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. - (2 கொரிந்தியர் 2:11).

ஒரு முறை சாத்தான் எல்லா பிசாசுகளையும் அழைத்து, சுவிசேஷம் காட்டு நெருப்பு போல பரவி கொண்டிருக்கிறது என்றும், எப்படியாவது சுவிஷேத்தை அழிக்க வேண்டும் என்றும், அதற்கு உபயோகமான திட்டங்களை கொடுக்கும்படி கேட்டு கொண்டான். எல்லா பிசாசுகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.
.
'நாம் பைபிளே இல்லாதவாறு அழித்து விடுவோம், அப்போது யாருக்கும் தேவன் ஒருவர் இருப்பதே தெரியாது' என்று ஒரு பிசாசு கூறியது. அதற்கு சாத்தான், 'நாம் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதை முயற்சித்து வருகிறோம் என்று உனக்கு தெரியாதா, நாம் அதை அழிக்க அழிக்க, அது கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்ததாக மாறிவிடுகிறது. அதை அழிக்க நினைத்த மனிதர்கள் தான் அழிந்தார்களே தவிர வேதாகமம் அழியவே இல்லையே' என்று கூறியது.
.
திரும்பவும் அமைதி ஏற்பட்டது. எல்லா பிசாசுகளும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தன. பின்னர், ஒரு பிசாசு எழுந்து, 'பொதுவாகவும் பகிங்கரமாகவும் கிறிஸ்தவர்கள் செய்யும் ஜெபங்களை தடுத்து விடுவோம். அதன்பின் யாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க பெலனும், தைரியமும் இராது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'அந்த முயற்சியில் நாம் ஏற்கனவே ஈடுபட்டு அமெரிக்காவில் எல்லா பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பகிரங்கமாக ஜெபிப்பதை நிறுத்தி விட்டோமே, ஆனால் அதினால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தனி ஜெபமும் அதிகமாகி விட்டது. ஆகையால் முன்னிருந்ததை விட இப்போது சுவிசேஷம் வேகமாக பரவி வருகிறது' என்று கவலைப்பட்டான்.
.
ஒரு பிசாசு எழுந்து 'எல்லா தேவாலயங்களையும் அழித்து விடுவோம், பின் ஒருவரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க முடியாது' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'இதையும் நாம் ஏற்கனவே எத்தனையோ முறை செய்து விட்டோம், சீனாவில் வெளியே ஒரு சபைக்கூட இல்லாதவாறு செய்தோம், ஆனால் இரகசிய சபைகள் எழும்பி இப்போது இலட்ச இலட்சமாய் சீனாவில் கிறிஸ்தவர்கள் பெருகி வருகிறார்கள்' என்று கவலைப்பட்டது.
.
ஒரு பிசாசு எழுந்து, ' நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்துவோம். கொலை செய்வோம். அவர்கள் இருதயத்தில் ஒரு பயம் வந்து, ஒருவரும் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்ல முடியாதபடி போய் விடும்' என்று கூறியது. அதற்கு சாத்தான், 'போடா முட்டாள், அதை செய்யாமலா இருக்கிறோம்? நைஜீரியாவில் எத்தனை பேரை அப்படியே சபையோடு எரித்து விட்டோம்! நாம் அவர்களை கொல்ல கொல்ல அவர்களின் இரத்தமும், அவர்களின் சாவும் ஒரு புதிய சபை தோன்றுவதற்கு அந்த இடத்தில் விதைக்கப்படுகிறது. ஆதி திருச்சபை உருவானதில் இருந்து நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் துன்புறுத்தி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நாம் தான் தோற்று கொண்டிருக்கிறோமே தவிர கிறிஸ்தவம் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, சபைகளும் பெருகி கொண்டு தான் இருக்கிறது. யாரும் உருப்படியான ஒரு யோசனை சொல்ல மாட்டீர்களா?' என்று பெருமூச்சு விட்டது.
.
கடைசியாக ஒரு பிசாசு எழுந்து, 'நான் ஒரு திட்டத்தை சொல்ல போகிறேன், கவனமாக கேளுங்கள், நாம் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் போய் கர்த்தருக்காக கடினமாக உழையுங்கள், கூடி ஜெபியுங்கள், தனித்து ஜெபியுங்கள், வேதத்தை தினமும் வாசியுங்கள், சபைகளை சபைகள் இல்லாத இடங்களில் ஸ்தாபியுங்கள், கர்த்தருக்காக வைராக்கியமாக காரியங்களை செய்யுங்கள், ஆனால் இன்று வேண்டாம், ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அதிக வேலை செய்து ரொம்பவும் களைப்பாக இருக்கிறீர்கள், ஆகவே நாளைக்கு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, நாளை திரும்பவும், எல்லாம் செய்யுங்கள், ஆனால் நாளை செய்யுங்கள் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் வேதம் வாசிப்பதையும், ஜெபிப்பதையும் செய்ய இருக்கும் மற்ற காரியங்களையும் அடுத்த நாள் அடுத்த நாள் என்று தள்ளி போட்டு கொண்டே வருவோம். அவர்கள் கடைசியில் ஒன்றுமே செய்ய மாட்டார்கள்' என்று கூறியது. உடனே எல்லா பிசாசுகளும், சாத்தானும் பலமாக கைகளை தட்டி, ' ஆஹா, நல்ல ஐடியா!' என்று கூறி ஏகமாய் ஆர்ப்பரித்தன. அதன்படி செய்ய ஆரம்பித்து வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றன.
.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காக என்னென்னவோ செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், வாஞ்சிக்கிறோம். ஆனால் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, இப்போது வேண்டாம், நாளைக்கு வைத்து கொள்வோம் என்று தள்ளி போட்டு கொண்டே இருக்கிறோமல்லவா? நாளையிலிருந்து ஒரு மணி நேரமாவது ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம், அதன்படி செய்ய உட்காரும்போதுதான், யாராவது வந்து பேசி பேசி நேரம் போவது தெரியாமல் பேசி விட்டு, ஐயோ இன்று ஜெபிக்கவில்லையே, நாளைக்கு ஜெபிப்போம் என்று தள்ளி போட்டு விடுகிறோம். நாமாக ஏதாவது முயற்சி செய்து ஆரம்பிக்காதவரை நாம் ஒரு போதும் ஒரு காரியத்தையும் செய்யவே முடியாது. தீர்மானங்கள் ஆயிரம் செய்யலாம், ஆனால் அதற்கென்று முயற்சி செய்யாதவரை ஒன்றும் நடைமுறைக்கு வர முடியாது.
.
உபவாசித்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானித்தால், ஒரு நாளை அதற்கென்று நியமித்து, அன்று நிச்சயமாக ஜெபித்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தீர்மானம் எடுத்ததால் எந்த பிரயோஜனமுமிருக்காது. ஒரே நாளில் இரண்டு மணி நேரம் ஜெபித்து விட்டு, பின் ஒரு வாரத்திற்கு ஜெபிக்காமல் இருப்பதும் தவறு. கொஞ்ச கொஞ்ச நேரமாக ஆரம்பிப்போம், ஒவ்வொரு நாளாக அதை அதிகமாக்குவோம். இது உடற்பயிற்சி செய்ய நாம் எப்படி கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பித்து பின் அதிகமாக்குகிறோமோ அதை போலத்தான், படிப்படியாக உயர்த்தும்போது நாம் கடைசியில் இவ்வளவு நேரமா ஜெபித்திருக்கிறோம் என்று நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு நாம் ஜெப வாழ்வு உயர்ந்திருக்கும்! அப்படிப்பட்ட ஜெப வாழ்வை, கர்த்தருக்காக வாழும் வாழ்வை, கர்த்தருக்காக செய்யும் பெரிய காரியங்களை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை

உயிர் பெற செய்பவரே

சாத்தானின் சகல தந்திரங்களை

தகர்த்தெறிய வாரும் ஐயா

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்

அன்பினால் இன்று அலங்கரியும்

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தருக்காய் நாங்கள் தீர்மானித்திருக்கும் காரியங்களில் நாளை நாளை என்று சத்துருவின் திட்டத்திற்கு நாங்கள் ஒத்து போகாதபடி, உடனடியாக ஆரம்பிக்கத்தக்கதாக எடுக்கும் முயற்சிகளை தேவரீர் ஆசீர்வதிப்பீராக. சாத்தானின் தந்திரங்களுக்கு நாங்கள் விலகி கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்ய எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் நேச தந்தையே, என் நாமத்தினால் நீங்கள் எதை கேட்டாலும் தருவேன் என்று வாக்குதத்தம் செய்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வருகிறோம் தகப்பனே,
..
சகோதரன் சிகி பால் ஜார்ஜ் அவர்களின் சகோதரி ஜெயா அவர்கள் நுரையீரல் கேன்சர் வியாதியால் வேதனைகள் பட்டு வருகிறதை அறிந்திருக்கிற தேவனே தயவாய் மகளை தொட்டு சுகப்படுத்தும் ஐயா. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே தகப்பனே, மகளின் வேதனைகளை மாற்றும். சுகத்தை தாரும். கேன்சர் வியாதியிலிருந்து சுகத்தை கட்டளையிடும். அவர்களின் விசுவாசத்தை வர்த்திக்க செய்யும்.
..
சகோதரன் ரெஜினால்ட் சாம்சன் அவர்கள் செய்ய நினைத்திருக்கும் பிராஜக்ட், மேலதிகாரிகளால் ஏற்று கொள்ளப்படதக்கதாக ஜெபிக்கிறோம். அவரை ஞானத்தால் நிரப்பி, சரியானபடி செய்து முடிக்க ஜெபிக்கிறோம்.
..
சவுதி அரேபியாவில் இரண்டு வருடமாக வேலை செய்து கொண்டிருக்கும் அந்தோனிசாமி அவர்கள் துபாயில் வேலைக்கு முயற்சி செ;யவதால் உமக்கு சித்தமானபடி அவருக்கு அங்கு வேலை கிடைக்க கிருபை செய்யும். அவருடைய மனைவி மகளை காத்து கொள்ளும்.
..
சகோதரன் வில்சன் தயா, லட்சுமணன், மனோகரன் ஆகிய மூன்று பேரும் எழுத இருக்கும் CCA (Certified Coding Associate Exam) or CCS (Certified Coding Specialist Exam) பரிட்சையை சரியானபடி எழுதி முடிக்க இவர்களுக்கு தேவன் கிருபை பாராட்டுவீராக. அதற்கான ஞானத்தினால் நிரப்பி, அவர்கள் படிக்க எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். கேள்விகளுக்கு சரியானபடி பதில் எழுத தெளிவான மனநிலையை கட்டளையிட்டருளும். தனது 43ஆவது பிறந்த நாளை வரும் 22ம் தேதி சகோதரன் வில்சன் தயா அவர்கள் கொண்டாட இருப்பதால், அவரை ஆசீர்வதித்தருளும். இந்நாள் வரை பாதுகாத்த தேவன் தொடர்ந்து அவரை வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் தென்னரசு, அவரது மனைவி சூசன்னா, மகன் பால் வினித்இவர்களுக்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, தேவரீர் குடும்பமாக அவர்களை ஆசீர்வதித்தருளும். தேவைகளை சந்தித்தருளும். உமக்கு சாட்சியுள்ள குடும்பமாக வாழ கிருபை செய்யும்.
..
சகோதரி ரீட்டாவிற்காக ஜெபிக்கிறோம். இரண்டு மாதங்களாக வயிற்று வலியினால் ஆஸ்பத்திரியில் இருக்கும் அந்த சகோதரியை நீர் தாமே தொட்டு சுகப்படுத்துவீராக. அவர்களுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியர்களுக்கு ஏற்ற ஞானத்தை கொடுத்து என்ன பிரச்சனை என்று கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை செய்யவும், சகோதரி சீக்கிரமாய் சுகமாகி, வீட்டிற்கு வந்து சேரவும் தேவன் தாமே கிருபை செய்வீராக.
..
சகோதரி கல்பனாவின் கணவர் அழகப்பன் 23ம் தேதியிலிருந்து, டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி எழுத இருக்கும் செமஸ்டர் பரிட்சையிலும் அரியர்ஸ் பரிட்சையிலும் நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்களோடு பாஸ் செய்ய தேவன் கிருபை செய்யும்.
..
சகோதரி மரியா மேரி அவர்களும் அவர்களுடைய சகோதரியும் டிசம்பர் மாதம் 4ம் தேதி எழுத இருக்கும் பேங்க் பரிட்சையில் ஞானத்தை கொடுத்து, சரியானபடி எழுத கிருபை செய்யும். விசேஷித்த ஞானத்தினால் நிரப்புவீராக. அவர்களுக்கு அந்த வேலை கிடைக்க உம்முடைய சித்தம் வெளிப்பட ஜெபிக்கிறோம். அவர்கள் அந்த பரிட்சைக்காக படிக்கும்படி எடுக்கும் முயற்சிகளை வாய்க்க செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: