Skip to main content

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்-Prayaasatthil deva anugraham


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 நவம்பர் மாதம் 23-ம் தேதி - புதன் கிழமை
பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். - (பிரசங்கி 3:11-12).
ஒரு தகப்பன் தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர் அவர்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்று மிகவும் கடினமாக உழைத்தார். வேலை செய்து முடித்து விட்டு, சாயங்கால வேளைகளில் படிக்க ஆரம்பித்தார். இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் விடாது படிக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அவரிடம், 'நீங்கள் எங்களோடு சரியாக நேரம் செலவழிப்பதில்லை' என்று முறையிட்டபோது, 'நான் எதற்கு இவற்றை எல்லாம் செய்கிறேன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே' என்று தேற்றுவார். தன் குடும்பத்தோடு இருப்பதை வாஞ்சிப்பார், ஆனால் படிப்பினிமித்தம் முடியாமல் போய்விடும்.
.
படித்த பாடங்களில் பரிட்சை எழுதி அதில் நல்ல மதிப்பெண்களோடு அவர் வெற்றி பெற்றார். மிகுந்த சந்தோஷத்தோடு வீடு வந்தார். 'பாருங்கள் நான் பட்ட பாட்டிற்கு கிடைத்த பரிசை!' என்று கூறினார். அவருடைய வேலை இடத்தில் அவருக்கு வேலை உயர்வு கிடைத்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது. குடும்பத்திற்கு இன்னும் வசதிகளை செய்து கொடுத்தார். பிள்ளைகளுக்கு நல்ல உடையும், உணவும் அவர்களுடைய தேவைகளும் சந்திக்கப்பட்டன.
.
இதோடு முடிந்தபாடில்லை, எப்படியாவது மேனேஜர் பதவி வேண்டும் என்று அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அதற்காக திரும்பவும் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக ஓபன் யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். பிள்ளைகள் மீண்டும் தங்கள் தகப்பனிடம் முறையிட்டனர், 'நீங்கள் எங்களோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு' என்று. அப்போதும் அவர் சொன்னார், 'நான் படும் கஷ்டங்கள் யாருக்காக? உங்களுக்காகத்தானே, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே!' என்று கூறினார். அவர் பட்டபாடுகளுக்கு பலனாக அவருக்கு மேனேஜர் பதவியும் கிடைத்தது. வீட்டிற்கு ஒரு வேலைக்காரியும் வைத்து மனைவிக்கு உதவி செய்தார்.
.
மீண்டும் இரவும் பகலும் உழைத்து, ஒரு பெரிய பங்களாவை மிகவும் பிரபலமான இடத்தில் நகரத்தில் வாங்கினார். கடைசியாக சொன்னார், 'இனிமேல் நான் எதுவும் படிக்க போவதில்லை, கடினமாக உழைக்க போவதில்லை, வருகிற சமபளத்தில் நாம் சந்தோஷமாக இருக்க போகிறோம், இனிமேல் நான் உங்களோடு அதிகமான நேரத்தை செலவிட போகிறேன்' என்று கூறினார். மனைவியும் பிள்ளைகளும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அடுத்த நாள் காலை அவர் எழுந்திரிக்கவில்லை, போய் எழுப்பி விட்டபோது, அவர் உயிரோடு இல்லை!
.
பிரியமானவர்களே, 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை' (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு திருப்தி உண்டாவதே இல்லை. இன்னும் இருந்தால் நலமாக இருக்குமே என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய, போதும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. நமக்கு இருக்க ஒரு வீடு நிச்சயமாக வேண்டும். அதற்காக நாம் கண்டிப்பாக உழைக்கத்தான் வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு நமது நேரத்தை கொடுக்காதபடி, எப்பொழுதும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று அதற்காக நமது பிரயாசத்தை எல்லாம் செலுத்தி, நமது உடல் நிலையை கெடுத்து கொள்வது கூடாது. அந்த தகப்பன் எப்பொழுது பார்த்தாலும் உழைத்து, உழைத்து தன் உடல் நிலையை கூட கவனிக்காது, பின்னர் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் அவற்றை அனுபவியாமற் போனது எத்தனை பரிதாபமான காரியம்!
.
நாம் எத்தனை தான் சம்பாதித்தாலும், நாம் அவற்றை அனுபவிக்கவும் வேண்டும். தகாதவிதமாக அல்ல, நல்ல உணவை உண்டு, நல்ல உடை உடுத்தி, தேவன் கொடுத்த சம்பாத்தியத்தை நல்லபடியாக அனுபவிக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு குடும்பம், வெளிநாட்டில் தாங்கள் இருக்கிற வீட்டை தங்கள் குடும்பம் (கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள்) மற்றும் மூன்று பேருக்கு வாடகை கொடுத்து, (இரண்டு அறைகள் கொண்ட வீடு) வாழ்ந்து வந்தார்கள். சிலர் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அப்படியே நாட்டிற்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டில் சரியாக உண்ணாமலும், தங்களை கவனித்து கொள்ளாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்ற வசனத்தின்படி, கர்த்தர் நமக்கு கொடுத்த வருமானத்தை ஏற்றபடி செலவு செய்யும் போது, அந்த வேலையை நமக்கு கொடுத்த தேவனும் மகிழ்வார், நாமும் சந்தோஷமாய் இருக்க முடியும். அதை நாம் தகாதவிதமாக பயன்படுத்தினால், வயிற்றை கட்டி, வாயை கட்டி பணம் எப்படியாவது சேர்ந்தால் போதும் என்று நினைத்தால், நமக்கு தேவன் கொடுத்த வேலைக்காக அவரே வேதனைப்படுவார், இந்த மனிதனுக்கு போய் இந்த நல்ல வேலையை கொடுத்தேனே என்று! 'இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம் (பிரசங்கி 5:18-19). ஆகவே அந்த அநுக்கிரகத்தை நாம் நல்லவிதமாக பயன்படுத்த தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்

வாழ தேவையான வசதி தந்தீர்

கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்

கடனே இல்லாமல் வாழ வைத்தீர்
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

.
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபையாக கொடுத்திருக்கிற நல்ல வேலைகளுக்காக நன்றி ஐயா. அந்த வேலைகளில் நாங்கள் கடினமாக உழைத்து, கிடைக்கும் வருமானத்தை தகுந்தபடி அனுபவிக்க தேவன் கிருபை செய்வீராக. பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று இரவும் பகலும் உழைத்து, உடல் நலத்தை கெடுத்து கொள்ளாதபடி, குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்கிறவர்களாக, உடல் நலத்தை கவனித்து கொள்கிறவர்களாக தேவன் கொடுத்த வேலையை சரியானபடி பயன்படுத்துகிறவர்களாக ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் கோட்டையும், தஞ்சமும், பெலனுமாகிய நல்ல தகப்பனே, எங்கள் ஜெபத்திற்கு கிருபையாக இரங்கி, பதிலை கொடுக்கிற நல்லவரே, உம்மை துதிக்கிறோம்.
..
சகோதரி விஜி அவர்கள் தன்னுடைய உற்றார்களால் பாடுகள் பட்டு, தற்போது துபாயில் தன் கணவரோடு இருப்பதால், அவர்களுக்கு குடும்ப விசாவும், ஒரு நல்ல வேலையும் கிடைத்து, தன் கணவரோடு வாழும்படி பெரிய காரியத்தை செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ஜெயா அவர்களுக்கு 32 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதால், ஏற்ற துணையை அவர்களுக்கு வெளிப்படுத்தி கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். பொருளாதார தடைகள், இன, ஜாதி, நிறத்தடைகள் யாவும் ஏற்படாதவாறு உம்முடைய சித்தம் மாத்திரம் நிறைவேறும்படியாக, நல்ல துணையை தேவன் கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
ரவிசங்கர் என்ற மனிதரையும், அவரை சேர்ந்த கூட்டத்தினரையும்தேவன் தாமே விடுவிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
எங்கள் ஜெபங்களை கேட்டு சகோதரன் இஸ்ரேல் பாண்டியராஜ் அவர்களின் மருமகளுக்கு சுகப்பிரசவத்தை கட்டளையிட்ட தயவிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தாயையும் சேயையும் ஆசீர்வதிப்பீராக.
..
சகோதரன் சிஜி ஜார்ஜ் அவர்களின் சகோதரி ஜெயாவுக்கு நுரையீரல் கேன்சருக்காக நாங்கள் ஜெபித்த ஜெபத்தை கேட்டு, நேற்றைய தினம் செய்த டெஸ்ட்களில் இதுவரை நார்மலாக இருக்கும்படியாக தேவன் பாராட்டின கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாளைய தினம் பயாப்ஸி செய்ய போகிறபடியால், அதையும் தேவன் நார்மலாக மாற்றி, தெய்வீக சுகத்தை அனுப்பும்படியாக, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக கிருபை செய்வீராக.
..
சகோதரன் ஜெரி அவர்கள் வரும் 26ம் தேதி ஒரு கம்பெனியில் இன்டர்வியூவிற்கு போக இருப்பதால் தேவன் தாமே இரங்கி உம்முடைய சித்தத்தின்படி அந்த வேலை கிடைக்க கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ஜெனிபர் அவர்களின் வெளி நாட்டிற்கு செல்ல இருக்கும் காரியங்களை உம்முடைய சித்தத்தின்படி வாய்க்க செய்வீராக. அவருடைய மாமிக்கு இருக்கும் கேன்சர் வியாதியிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் விண்ணப்பங்களை துதி ஸ்தோத்திரங்களோடு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: