Skip to main content

Posts

Showing posts from July, 2012

சாத்தானின் தந்திரங்கள்-Saatthaanin thanthirangal

அனுதின மன்னா A free Daily Devotion in Tamil right to your email! 2011 நவம்பர் மாதம் 21-ம் தேதி - திங்கள் கிழமை சாத்தானின் தந்திரங்கள் கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. - (2 கொரிந்தியர் 2:11). .  ஒரு முறை சாத்தான் எல்லா பிசாசுகளையும் அழைத்து, சுவிசேஷம் காட்டு நெருப்பு போல பரவி கொண்டிருக்கிறது என்றும், எப்படியாவது சுவிஷேத்தை அழிக்க வேண்டும் என்றும், அதற்கு உபயோகமான திட்டங்களை கொடுக்கும்படி கேட்டு கொண்டான். எல்லா பிசாசுகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன. . 'நாம் பைபிளே இல்லாதவாறு அழித்து விடுவோம், அப்போது யாருக்கும் தேவன் ஒருவர் இருப்பதே தெரியாது' என்று ஒரு பிசாசு கூறியது. அதற்கு சாத்தான், 'நாம் எத்தனையோ நூற்றாண்டுகளாக அதை முயற்சித்து வருகிறோம் என்று உனக்கு தெரியாதா, நாம் அதை அழிக்க அழிக்க, அது கிறிஸ்தவர்களுக்கு விசேஷித்ததாக மாறிவிடுகிறது. அதை அழிக்க நினைத்த மனிதர்கள் தான் அழிந்தார்களே தவிர வேதாகமம் அழியவே இல்லையே' என்று கூ...

பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம்-Prayaasatthil deva anugraham

அனுதின மன்னா A free Daily Devotion in Tamil right to your email! 2011 நவம்பர் மாதம் 23-ம் தேதி - புதன் கிழமை பிரயாசத்தில் தேவ அனுக்கிரகம் கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். - (பிரசங்கி 3:11-12). ஒரு தகப்பன் தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர் அவர்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது என்று மிகவும் கடினமாக உழைத்தார். வேலை செய்து முடித்து விட்டு, சாயங்கால வேளைகளில் படிக்க ஆரம்பித்தார். இப்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் விடாது படிக்க ஆரம்பித்தார். அவரது குடும்பம் அவரிடம், 'நீங்கள் எங்களோடு சரியாக நேரம் செலவழிப்பதில்லை' என்று முறையிட்டபோது, 'நான் எதற்கு இவற்ற...

எதை தெரிந்தெடுப்பீர்கள்?-Ethai therintheduppeergal ?

அனுதின மன்னா A free Daily Devotion in Tamil right to your email! 2011 நவம்பர் மாதம் 27-ம் தேதி - ஞாயிற்று கிழமை எதை தெரிந்தெடுப்பீர்கள்? கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - யோவான் 10:10. ஒரு பணக்கார வாலிபன், மரித்து, பரலோக வாசலண்டை போனபோது, அங்கு பரிசுத்த பேதுரு நின்று அந்த வாலிபனிடம், ‘நாங்கள் இங்கு ஒரு புதிய தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். பரலோகத்திற்கு செல்வதா அல்லது நரகம் செல்வதா என்று நீங்களே தீர்மானிக்கலாம்’ என்றார். அப்போது அந்த வாலிபன், 'ஓ! இவ்வளவுதானே, நான் பரலோகத்திற்கு செல்லவே விரும்புகிறேன்' என்றுக் கூறினான். அப்போது பேதுரு, அப்படி தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல, அதற்கு முன்பு நரகத்தில் ஒரு நாளும், பரலோகத்தில் ஒரு நாளும் செலவழிக்க வேண்டும். அதன்பின், நீ முடிவெடுக்கலாம் என்றுக் கூறினார். . முதலில், அவன் நரகத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கு போனவுடன், அருமையான ஒரு தோடடம் இருந்தது. அங்கு அவனுடை...

விசுவாசமுள்ள ஜெபம் - Visuvaasamulla Jebam

அனுதின மன்னா A free Daily Devotion in Tamil right to your email! 2011 நவம்பர் மாதம் 28-ம் தேதி - திங்கள் கிழமை விசுவாசமுள்ள ஜெபம் கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. - (யாக்கோபு 5:16). ஜேம்ஸ் கோல்ட் என்ற அமெரிக்க கோடீஸ்வரர் தன் வியாபார காரியமாக நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல் நகருக்கு போய் விட்டு திரும்பும்போது, வந்த வழியே திரும்ப அவருக்கு மனமில்லை. ஆகவே அமெரிக்காவின் தென் பகுதியை சுற்றி பார்த்து விட்டு போக எண்ணி இரயில் ஏறினார். டெக்சாஸ் மாகாணத்தில் வரும்போது ஓர் இடத்தில் எஞ்சினில் கோளாறு ஏறுபட்டு இரயில் நிறுத்தப்பட்டது. இரயில் ஓட்டுனர், 'எஞ்சினை சரி செய்ய குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகும். ஆகவே பயணிகள் விரும்பினால் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று இளைப்பாறி வரலாம்' என்றார். . நேரத்தை செலவழிப்பதற்காக ஜேம்ஸ் கோல்ட் பக்கத்து கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒரு மைதானத்தில் ஒரு கூட்ட மக்களுக்கு முன் ஒருவர் ஏலம் கூறி கொண்டிருந்தார். கோல்ட், 'இங்கு என்ன ஏலம் விடப்படுகிறது?' என்ற...