Skip to main content

நன்மையானதையே அருளும் தேவன்-Nanmaiyaanathaiye Arulum Devan Lyrics


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி - செவ்வாய் கிழமை
நன்மையானதையே அருளும் தேவன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே'. - (எரேமியா 29:11).

ஒரு விவசாயிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஒருவளை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒரு முறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது, அவள் தன் தகப்பனிடம், 'அப்பா, தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டி கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடி போய் கொண்டு இருக்கின்றன' என்று கூறினாள்.
அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது, அவள், தன் தகப்பனிடம், 'அப்பா நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்து கொள்ளுங்கள். அப்போதுதான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாக காய முடியும்' என்று கேட்டு கொண்டாள்.
இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக, 'தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது' என்று ஜெபித்தார்.
நம் தேவன் நம்முடைய காலங்களை அறிந்தவரல்லவா? நம் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஒரு சிறு பிள்ளை கத்தி வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை அந்த பிள்ளைக்கு அதனுடைய பெற்றோர் தருவார்களோ? நிச்சயமாக இல்லை. அதுப்போல நாம் அநேக தேவைகளை குறித்து ஆண்டவரிடம் கேட்கலாம். ஆனால் நமக்கு எது நன்மை என்று தேவன் அறிந்திருக்கிறார். அவருடைய சித்தத்திற்கு ஒப்புவித்து நாம் ஜெபிக்கும்போது, அவர் நமக்கு நன்மையானதையே நிச்சயமாய் கொடுப்பார்.
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று நமக்கு வாக்குதத்தம் செய்த ஆண்டவர், தீமையானவற்றை அல்ல, நன்மையானவற்றையே கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.
ஒருவேளை நமக்கு கிடைத்திருக்கும் எந்த ஒரு காரியமும் நம்முடைய விருப்பமில்லாததாக இருக்கலாம். ஆனால், அவருடைய சித்தத்திற்கு ஒப்பு கொடுத்து ஜெபித்து, அதன்படி பெற்று கொண்டதை குறித்து, சோர்ந்து போகாமல், தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே செய்வார் என்று நம்பிக்கையோடு, வாழ முயற்சிக்க வேண்டும். ஒருவேளை தற்போது நமக்கு தெரியாவிட்டாலும், பிற்காலத்தில் அது எத்தனை நன்மையானது என்று தெரியவரும்போது, கர்த்தரை துதிக்காமல் நம்மால் இருக்க முடியாது. '..கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' என்று வாக்குதத்தம் செய்தவர், நிச்சயமாகவே நம் சந்தோஷம் நிறைவாகும்படியே தந்தருளுவார். ஆமென் அல்லேலூயா!
ஒரு வழி அடையும் போது

புதுவழி திறந்த தேவா

திறந்த வாசலை என் வாழ்க்கையில்

அடைக்காத ஆண்டவரல்லோ

..
கடந்து வந்த பாதையில்

கண்மணி போல் காத்திட்டீர்

கடுகளவும் குறை வைக்காமலே

அதிகமாய் ஆசிர்வதித்தீர்



ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், எங்கள் தேவைகள் விருப்பங்கள் அனைத்தையும் அறிந்த நல்லவரே, எது எங்களுக்கு நலமானது என்றும் நீர் அறிந்திருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் விருப்பங்களல்ல, உம்முடைய விருப்பமே எங்கள் வாழ்வில் நிறைவேறட்டும் தகப்பனே. நீர் உமக்கு சித்தமானதை கொடுக்கும்போது, அது இன்னும் நிறைவானதாக ஆசீர்வாதமாக இருக்குமே. அப்படிப்பட்டதை பெற்று கொண்டு, நிறைவாய் வாழ கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபத்தை கேட்டு, பதில் கொடுக்கும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும், நாங்கள் சகோதரி ரோஸ் அவர்களின் தகப்பனாருக்காக உம்மிடத்தில் மன்றாடுகிறோம். அவருடைய தகப்பனாருக்கு Neuro Endocrine Tumour என்று சொல்லி, அதற்கான ரிப்போர்ட்டிற்காக காத்திருக்கிறார்களே, தேவரீர் கண்ணோக்கி பார்த்து, அவற்றை நார்மலாக மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். அப்படி ஏதாவது கட்டி இருந்தாலும் நீர் அதை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். அந்த குடும்பம் சந்தோஷப்படும்படியாக தேவரீர் பெரிய அற்புதத்தை செய்வீராக.
..
சகோதரி கலைவாணி அவர்களின் குடும்பத்திலுள்ள அனைவரும் இரட்சிக்கப்படும்படியாக இந்த வேளையில் உம்மிடம் ஜெபிக்கிறோம். 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்' என்ற வாக்குதத்தத்தின்படி, உம்மை விசுவாசிக்கிற அந்த சகோதரியின் குடும்பம் இரட்சிக்கப்பட தேவன் கிருபை செய்வீராக. அவர்களுடைய சகோதரர் கொளதம் ராஜ் அவர்களை 18.11.06 லிருந்து காணவில்லை என்றும், அவர்கள் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று கூட அறியாத நிலையில் இருக்கும் அவர்களுக்கு, தேவரீர் அந்த சகோதரன் தன் வீடு தேடி வந்து சேரும்படியாக கிருபை செய்வீராக. அந்த சகோதரியின் சகோதரிகள், புனிதவேணி, தழிழரசி இருவருக்கும், கர்த்தர் ஏற்ற துணையை கொடுத்து திருமண காரியங்கள் அமைய கிருபை தருவீராக. அந்த சகோதரியின் படிப்பிற்கேற்ற நல்ல வேலையை கட்டளையிடவும் ஜெபிக்கிறோம். அவர்களுடைய அத்தை ஜியோனாவிற்கு வரப்போகும் 17ம் தேதி திருமணம் நடக்க இருப்பதால், திருமணத்தின் தேவைகளை சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம். எல்லா குறைகளையும் மாற்றி, நிறைவாக அந்த திருமணம் நடந்து முடிய ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் சம்பத் ஆபிரகாம் அவர்கள் 5 சென்ட் நிலம் அக்ரிமென்ட் போடவுள்ளதால், அதற்கான பணத்தேவைகள் செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்குள் சந்திக்கப்பட ஜெபிக்கிறோம். அவருடைய பிள்ளைகள் தேவனை அறிகிற அறிவிலும், படிப்பிலும் சிறந்து விளங்க கிருபை செய்வீராக. அவருடைய மச்சான்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு வர தேவன் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி. எங்கள் விண்ணப்பங்களை இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: