அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும்

அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும்
என்ன தான் குறைகள் செய்தாலும்
உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் - 2
உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீயின்றி என் இதயத்தில் நிறைவில்லை - 2
உந்தன் தாளில் கூடும் பலகோடி பூவிதழுள் நானும் ஒன்றாவேன்
உன் திருநாளில் என் உள்ளம் மங்களம் பாடும் தன் இல்லம்
உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்
எடுப்பதும் உன் உருவே - 2
துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே
என்னிடம் வலுவில்லை உன் பலமன்றி கதியில்லை - 2
வரும் காலம் உன் மடியில்
வாழ்வும் உன் மடியில் நானும் உன் சந்நிதியில்
உன் திரு உள்ளம் என் இல்லம்
உன் திரு சொல்லே என் சொந்தம்
உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்
Comments
Post a Comment