விந்தை கிறிஸ்தேசு ராஜா
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை (2)
சுந்தரம் மிகு இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
செல்வாக்குகள் மிக விருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே – விந்தை
ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
தூய்மையடைத்து மேன்மை ஆகினேன் – விந்தை
சிந்துதோ! துயரோடன்பு
மன்னா, இதைப் போன்ற காட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை
Video:
Comments
Post a Comment