Skip to main content

ஸ்தோத்திரம் இயேசு நாதா -Sthothiram Yesu naatha Lyrics



 ஸ்தோத்திரம் இயேசு நாதா




/heart1. ஸ்தோத்திரம் இயேசு நாதா

     உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
     ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
     திரு நாமத்தின் ஆதரவில்!


/heart 2. வான துதர் சேனைகள்

    மனோகர கீதங்களால் எப்போதும்
    ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
    மன்னவனே உமக்கு!


/heart 3. இத்தனை மகத்துவமுள்ள

    பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
    எத்தனை மாதயவு நின் கிருபை
    எத்தனை ஆச்சரியம்!


/heart 4. நின் உதிரமதினால்

    திறந்த நின் ஜீவப் புது வழியாம்
    நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
    சேரவுமே சந்ததம்!


/heart 5. இன்றைத் தினமதிலும்

    ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
    தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
    ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!


/heart 6. நீரல்லால் எங்களுக்குப்

    பரலோகில் யாருண்டு ஜீவநாதா
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!
Video:
 

Comments

  1. I am trying to find out the name of the composer of this beautiful song of praise. Was it Sister Saral Navaroji? I would be really grateful for the info, as I have posted a translation of this song on the blog "tamengtrans.blogspot.co.uk " I would like to acknowledge the composer of this song on that blog. Please email the answer to me at seben890@yahoo.co.uk Thank you in anticipation.
    Ess

    ReplyDelete
    Replies
    1. This song was written by P.V Thommy Upadesi(1881-1919). Basically a malayali composer who has written more than 100 devotional songs in malayalam and Tamil. He had learnt tamil too. This song was written in malayalam as "Vandhanam Yesupara". I have mailed his details.

      Delete
    2. This song was written by P.V Thommy Upadesi(1881-1919). Basically a malayali composer who has written more than 100 devotional songs in malayalam and Tamil. He had learnt tamil too. This song was written in malayalam as "Vandhanam Yesupara". I have mailed his details.

      Delete
  2. Thank you lots for this great amz song
    After 10 years I remember this prise song
    God bless you

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...