Skip to main content

அன்னை மாதாவின் ஜெபங்கள் -Prayers for Mother Mary

அன்னை மாதாவின் ஜெபங்கள் 
மங்கள வார்த்தை செபம்:
   அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிபெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே!
   புனித மரியாவே, இறைவனின் மாதாவே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

இரக்கத்தின் அரசி செபம்:
   இரக்கத்தின் அன்னையாகிய எங்கள் அரசியே வாழ்க! எங்கள் வாழ்வே, தஞ்சமே, இனிமையே வாழ்க! நாடிழந்து தவிக்கும் நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்த கண்ணீர் பள்ளத்தாக்கிலே நின்று மனம் நொந்து அழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய இரக்கமுள்ள திருக்கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும். மேலும் நாங்கள் இந்த வேற்றிடம் கடந்த பிறகு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு கிறிஸ்து நாதருடைய, முழுமையான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும், இரக்கமும் கனிவும் இனிமையும் உள்ள கன்னி மரியாவே!

புனித பெர்னார்டின் செபம்:
   மிகவும் இரக்கமுள்ள தாயே, இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்து, உமது உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியரின் அரசியான கன்னிகையே, என் தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் தூண்டப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்து நிற்கிறேன். பெருமூச்செறிந்து அழுது நிற்கிற பாவியாகிய நான், உமது இரக்கத்தை எதிர்பார்த்து உமது சமூகத்திலே நிற்கிறேன். மனுவுரு ஏற்ற வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கனிவோடு கேட்டு கிருபை புரிந்தருளும். -ஆமென்.

பாவிகளின் அடைக்கல செபம்:
   சென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாவே, பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம். எங்கள்பெரில் இரக்கமாய் இருந்து, எங்களுக்காக உமது திருமகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

பொதுவான மூவேளை செபம்:
   முதல்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்
எல்லோரும்: அவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறைந்த...
முதல்: இதோ ஆண்டவருடைய அடிமை
எல்லோரும்: உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறைந்த...
முதல்: வார்த்தை மனிதர் ஆனார் 
எல்லோரும்: நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறைந்த...
முதல்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
எல்லோரும்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
   செபிப்போமாக: இறைவா, வானதூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசு மனிதரானதை அறிந்திருக்கிறோம். அவருடையப் பாடுகளினாலும் சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையுமாறு, எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென். 
பாஸ்கா காலத்தின் மூவேளை செபம்:
   முதல்: விண்ணக அரசியே! மனம் களிகூரும், அல்லேலூயா!
எல்லோரும்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறுபெற்றீர், அல்லேலூயா!
முதல்: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
எல்லோரும்: எங்களுக்காக இறைவனை மன்றாடும், அல்லேலூயா!
முதல்: கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்படைவீர், அல்லேலூயா!
எல்லோரும்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
   செபிப்போமாக: இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூர அருள்புரிந்தீரே, அவரது திருத்தாயாகிய கன்னி மரியாவின் துணையால் நாங்கள் என்றும் நிலைத்த வாழ்வின் பேரின்பத்தைப் பெற அருள் புரியுமாறு, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

காணிக்கை ஜெபம்:

காணிக்கை ஜெபம்: இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென். அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் க...