Skip to main content

மந்தையில் சேரா ஆடுகளே - Manthaiyil sera aadugale Lyrics


மந்தையில் சேரா ஆடுகளே 


மந்தையில் சேரா ஆடுகளே 
எங்கிலும் கோடி கோடி உண்டே 
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே 
தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில் 

அழைக்கிறார் இயேசு 
அவரிடம் பேசு நடத்திடுவார் 

/heart 1. காடுகளில் பல நாடுகளில் 
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா? 
பாடுபட்டேன் அதற்காகவுமே 
தேடுவோர் யார் என் ஆடுகளை? 

/heart 2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு 
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு 
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் 
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் 

/heart 3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் 
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும் 
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும் 
அதை உன்னிடம் கேட்கிறேன் - தரவேண்டும் 

Comments

  1. How can i listion this song

    ReplyDelete
    Replies
    1. I haven't added any audio or video content to this post. So you cannot listen to this song in my blog.

      Delete
  2. http://m.youtube.com/watch?v=3NXU47_Z8bI&feature=youtube_gdata_player

    ReplyDelete
  3. http://m.youtube.com/watch?v=3NXU47_Z8bI&feature=youtube_gdata_player

    ReplyDelete
  4. http://m.youtube.com/watch?v=3NXU47_Z8bI&feature=youtube_gdata_player

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: