என்னை நேசிக்கின்றாயா ? என்னை நேசிக்கின்றாயா ? என்னை நேசிக்கின்றாயா ? கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) (என்னை நேசிக்கின்றாயா.......) வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய் (2) (என்னை நேசிக்கின்றாயா.......) பாவத்தின் அகோரத்தைப் பார்;;; பாதகத்தின் முடிவினைப் பார்; (2) பரிகாசச் சின்னமாய்ச் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2) (என்னை நேசிக்கின்றாயா.......) பாவம் பாரா பரிசுத்தர்;;; நான் பாவி உன்னை அழைக்கிறேன் பார்; (2) உன் பாவம் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாற வா (2) (என்னை நேசிக்கின்றாயா.......) உம்மை நேசிக்கின்றேன் நான் உம்மை நேசிக்கின்றேன் நான் (2) கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பேனோ (2) Video: