Skip to main content

Posts

Showing posts from March, 2012

என்னை நேசிக்கின்றாயா ? - Ennai nesikintraaya Lyrics

என்னை நேசிக்கின்றாயா ? என்னை நேசிக்கின்றாயா ? என்னை நேசிக்கின்றாயா ? கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2)    (என்னை நேசிக்கின்றாயா.......)  வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் (2) தேடி இரட்சிக்கப் பிதா என்னை அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய் (2)    (என்னை நேசிக்கின்றாயா.......)  பாவத்தின் அகோரத்தைப் பார்;;; பாதகத்தின் முடிவினைப் பார்; (2) பரிகாசச் சின்னமாய்ச் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் (2)    (என்னை நேசிக்கின்றாயா.......)  பாவம் பாரா பரிசுத்தர்;;; நான் பாவி உன்னை அழைக்கிறேன் பார்; (2) உன் பாவம் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாற வா (2)    (என்னை நேசிக்கின்றாயா.......) உம்மை நேசிக்கின்றேன் நான் உம்மை நேசிக்கின்றேன் நான் (2) கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பேனோ (2)                                        Video:

அன்னை மாதாவின் ஜெபங்கள் -Prayers for Mother Mary

அன்னை மாதாவின் ஜெபங்கள்   மங்கள வார்த்தை செபம்:    அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே , பெண்களுக்குள் ஆசிபெற்றவர் நீரே , உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே!    புனித மரியாவே , இறைவனின் மாதாவே , பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென். இரக்கத்தின் அரசி செபம்:    இரக்கத்தின் அன்னையாகிய எங்கள் அரசியே வாழ்க! எங்கள் வாழ்வே , தஞ்சமே , இனிமையே வாழ்க! நாடிழந்து தவிக்கும் நாங்கள் ஏவையின் மக்கள் , உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்த கண்ணீர் பள்ளத்தாக்கிலே நின்று மனம் நொந்து அழுது , உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே , உம்முடைய இரக்கமுள்ள திருக்கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும். மேலும் நாங்கள் இந்த வேற்றிடம் கடந்த பிறகு , உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு கிறிஸ்து நாதருடைய , முழுமையான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும் , இரக்கமும் கனிவும் இனிமையும் உள்ள கன்னி மரியாவே! புனித பெர்னார்டின் செபம்:    மிகவும் இரக்கமுள்ள தாயே...

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Karunai Mazhaiye mary maatha Lyrics

  கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ   கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ  கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ - ௨ 1.  கன்னிமாதா தேவசபையின் கதவு திறவாதோ - 2   கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ - 2 2.  தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே - 2   சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே  ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே  உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே - 3 Video:

மந்தையில் சேரா ஆடுகளே - Manthaiyil sera aadugale Lyrics

மந்தையில் சேரா ஆடுகளே   மந்தையில் சேரா ஆடுகளே   எங்கிலும் கோடி கோடி உண்டே  சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே  தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்  அழைக்கிறார் இயேசு  அவரிடம் பேசு நடத்திடுவார்    1. காடுகளில் பல நாடுகளில்  என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?  பாடுபட்டேன் அதற்காகவுமே  தேடுவோர் யார் என் ஆடுகளை?    2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு  என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு  அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்  இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்    3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்  என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்  என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்  அதை உன்னிடம் கேட்கிறேன் - தரவேண்டும் 

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே - Mega meethil yesu raajan Lyrics

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே பல்லவி     மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!         அனுபல்லவி     ஆயத்தமுள்ளவரை ஆகாயம் சேர்க்க அவரே வாராறே!     சரணங்கள்1 1 . ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!      மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் - மேகமீதில் 2 . கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்     மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே - மேகமீதில் 3 . பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே     கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே  கொடுத்திடுவார் - மேகமீதில் 4 . அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!     அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் -   மேகமீதில் 5 . ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!     நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் -   மேகமீதில் 6 . அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே     வல்லவர...

விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai kristhesu raaja Lyrics

விந்தை கிறிஸ்தேசு ராஜா விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தஞ் சிலுவை என் மேன்மை (2) சுந்தரம் மிகு இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் மிக விருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே – விந்தை உம் குருசே ஆசிக் கெல்லாம் ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம் துங்க இரத்த ஊற்றில் மூழ்கி தூய்மையடைத்து மேன்மை ஆகினேன் – விந்தை சென்னி, விலா, கை, கால் னின்று சிந்துதோ! துயரோடன்பு மன்னா, இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை இந்த விந்தை அன்புக் கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும் என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை Video:

மண்ணோரை மீட்டிடவே பாரில் - Mannorai meettidave paaril Lyrics

மண்ணோரை மீட்டிடவே பாரில் மண்ணோரை மீட்டிடவே பாரில் விண் வேந்தன் மைந்தனாகினார் (2)   1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே மார்க்கம் திறக்க மனிதனானார் வாக்கு மாறா தேவ மைந்தன் ஏழைக் கன்னி மடியில் உதித்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம்   2. மண்ணில் கொடிய இருள் நீங்க மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார் விண்ணில் மா ஒளிவிளங்க மன்னர் மூவர் தேடி வந்தார் மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே தூதரோடு நாமும் பாடுவோம்

மாதா உன் கோவிலில் - Matha un kovilil Lyrics

மாதா உன் கோவிலில் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னைதான் தாயென்று உன்னைதான் பிள்ளைக்கு காட்டினேன் - மாதா சரணம் 1 மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே - 2 மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் சரணம் 2 காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2 தரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் சரணம் 3 பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2 அன்னை இல்லாத மகனை தாலாட்டுது கர்த்தரின் கட்டளை... நான் என்ன சொல்வது - மாதா மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் தாயென்று உன்னை தான் தாயென்று உன்னை தான் பிள்ளைக்கு காட்டினேன் - மாதா Audio:  மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் Video:  

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்

மாசில்லா கன்னியே மாதாவே உன்மேல்   மாசில்லா   கன்னியே மாதாவே உன்மேல்   நேசமில்லாதவர் நீசரே   ஆவார் | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)   - (2)     மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் அதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)    - (2) தாயே   நீ ஆனதால்   தாபரிதென்மேல் நேசம்   வைத்தாள்வது நின்   கடனாமே | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! | ...(2)    - (2)     அருள் நிறைந்த மாதாவே ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள்ளே பேறு பெற்றாயே | வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! |...(2)   -  (2) **வாழ்க! வாழ்க! வாழ்க மரியே! என்பதை ஆமென்! ஆமென்! ஆமென் மரியே! என்றும் பாடலாம்.** Video:

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - Manavaazhvu Puvi thanil Vaazhvu Lyrics

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு பல்லவி மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு  வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு சரணங்கள்   1. துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல   2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல   3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம் அன்பு, உதாரம் அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல  Video:

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே -Mangalam Sezhikka Lyrics

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே பல்லவி மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே சரணங்கள்   1. மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ   2. மங்கள மணமகன் xxxxxx-க்கும் மங்கள மணமகள் xxxxx-க்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே –  உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்   3. சங்கை நித்திய நாதனும் நீ பங்கமில் சத்திய போதனும் நீ மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ இத்தரை இத் திருமணத்தின் இருவர் ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே. Video: Karoake: