உம் அருள் பெற, இயேசுவே
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
Comments
Post a Comment