Skip to main content

உம்மைப்போல் யாருண்டு? -Ummai Pola Yaarundu Lyrics


உம்மைப்போல் யாருண்டு?



உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா 

இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு? 
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் 
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 

 1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில் 
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் 
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் 
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
உம்மை மறந்த ஓர் துரோகி நான் 
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா? 
அடிமை உமக்கே இனி நான். 

 2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை 
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் 
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும் 
உமக்கே உகந்த தூய சரீரமாய் 
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் 
இயேசுவே ஆவியால் நிரப்பும் 
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ 
அக்கினி என் உள்ளம் இறக்கும் 

 3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் 
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் 
மேசியா வருகை வரையில் பலரை 
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் 
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய 
தினந்தோறும் தேவா உணர்த்தும் 
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் 
என்றுமே வராமல் காத்திடும் 

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: