Skip to main content

உள்ளத்தில் அவர்பால் பேரன்பு -Ullathil avar paal peranbu Lyrics


உள்ளத்தில் அவர்பால் பேரன்பு

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் 

எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர் 
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் 
இயேசு தேடும் நபர் இவரே 


 1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம் 

எளிதில் புரிவார் அவரின் பாரத்தை 
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை 
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார் 
உண்மை அடியவர் இயேசுவை அறிவார் 
தம்மையே அவர்க்காய் அளிப்பார் 


 2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள் 

பாவத்தால் நிறைந்து சாபமாகிறது 
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக 
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ? 
உண்மை அடியவர் இயேசுவை அறிவார் 
தம்மையே அவர்க்காய் அளிப்பார் 


 3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு 

செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து 
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர் 
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் 
உண்மை அடியவர் இயேசுவை அறிவார் 
தம்மையே அவர்க்காய் அளிப்பாh 

Comments

Popular posts from this blog

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம்  இடைவிடா சகாய அன்னையே! பனிமாதாவே இரக்கமுள்ள தாயே, நோயுற்றோரின் பிணிகளை உம் திருமகன் சுமந்துகொண்டார்; தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார். இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும். எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல், திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும். நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின் திருவுளமானால் புருமையுடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும். நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென். நோய் வேளை மன்றாட்டு இரக்கமுள்ள குழந்தை இயேசுவே ! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும் . இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது, நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும் தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .   இன்று...

சுருக்கமான மனத்துயர் செபம்:

சுருக்கமான மனத்துயர் செபம்: என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் - Andavarai nan potriduven song Lyrics

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ·            ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் (2) என் ஆன்மா அவரில் பெருமைகொள்ளும் -2 எளியவர் இதைக்கேட்டு மகிழ்வாராக -2 ·            ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ஆண்டவர் எவ்வளவோ இனியவரே -2 என்று சுவைத்துப்பாருங்கள் -2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று Video: