Skip to main content

Posts

Showing posts from December, 2011

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே -Oottu thanneere enthan theva aaviye Lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே   ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா   ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே  ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்  1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே  கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே  பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்  தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே  2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே  ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே  கனிதந்திட நான் செழித்தோங்கிட  கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட  3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே  எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே  ஆத்ம பலமும் பரிசுத்தமும்  ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே  4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே  இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே  பாவக் கறைகள் முற்றும் நீங்கிட  பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

உள்ளமெல்லாம் உருகுதையா -Ullamellam Uruguthaiya Lyrics

உள்ளமெல்லாம் உருகுதையா    1. உள்ளமெல்லாம் உருகுதையா உத்தமனை நினைக்கையிலே உம்மையன்றி வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்தவர் சொல்லடங்கா நேசத்தாலே உம் சொந்த மாக்கிக் கொண்டீரே  2. எத்தன் என்னை உத்தமனாக்க சித்தம் கொண்ட என் இயேசையா எத்தனையோ துரோகம் நான் செய்தேன் அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான் அத்தனையும் என் பாவமன்றோ கர்த்தனே உம் அன்புக்கீடாய் நித்தம் செய்வேன் உம் சேவையே  3. வானமீதில் இயேசு ராஜன் வேகம் வரும் நாளன்றோ லோக மீதில் காத்திருப்போhர் ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நாம் முகமுகமாய்த் தரிசிக்க ஆவலோடு ஏங்கும் தாசன் சோகம் நீங்கும் நாளன்றோ?

உள்ளத்தில் அவர்பால் பேரன்பு -Ullathil avar paal peranbu Lyrics

உள்ளத்தில் அவர்பால் பேரன்பு உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்   எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்  சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்  இயேசு தேடும் நபர் இவரே    1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்  எளிதில் புரிவார் அவரின் பாரத்தை  உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை  தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்  உண்மை அடியவர் இயேசுவை அறிவார்  தம்மையே அவர்க்காய் அளிப்பார்    2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்  பாவத்தால் நிறைந்து சாபமாகிறது  திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக  தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?  உண்மை அடியவர் இயேசுவை அறிவார்  தம்மையே அவர்க்காய் அளிப்பார்    3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு  செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து  யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்  உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்  உண்மை அடியவர் இயேசுவை அறிவார்  தம்மையே அவர்க்காய் அளிப்பாh 

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் -Ularntha elumbugal uyir petru ezha vendum Lyrics

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்   ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்  அசைவாடும் - இன்று  அசைவாடும்  ஆவியான தேவா    1. நரம்புகள் உருவாகட்டும்  உம் சிந்தை உண்டாகட்டும்    2. சதைகள் உண்டாகட்டும்  உம் வசனம் உணவாகட்டும் 

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் -Urakkam thelivom urchagam kolvom Lyrics

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் 1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்   உலகத்தின் இறுதி வரை   கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்  நாள்வரை உழைத்திடுவோம்!   2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்  ஆவியில் அனலும் கொள்வோம்  அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து  வேற்றுமையின்றி வாழ்வோம்!   3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்  சரித்திரம் சாட்சி கூறும்  இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி  நாதனுக்காய் மடிவோம்!   4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்  தரித்திரர் ஆனதில்லை  இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்  நஷ்டப்பட்டதில்லை!   5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்  உலர்ந்த எலும்புகளே  நீங்கள் அறியா ஒருவர் உங்கள்  நடுவில் வந்துவிட்டார் 

உம்மைப்போல் யாருண்டு? -Ummai Pola Yaarundu Lyrics

உம்மைப்போல் யாருண்டு ? உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா   இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு?   பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்  தேவா தம் அன்பினால் மன்னித்தீர்    1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில்  அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்  நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்  மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்  என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?  உம்மை மறந்த ஓர் துரோகி நான்  என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?  அடிமை உமக்கே இனி நான்.    2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை  என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்  நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்  உமக்கே உகந்த தூய சரீரமாய்  ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்  இயேசுவே ஆவியால் நிரப்பும்  வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ  அக்கினி என் உள்ளம் இறக்கும்    3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்  சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்  மேசியா வருகை வரையில் பலரை  சிலுவைக் கருகில் அழைக்க ஏவ...

உம்மால் ஆகாத காரியம் -Ummal aagatha kaariyam ontrum illa Lyrics

உம்மால் ஆகாத காரியம்   உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3) எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2) ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)  1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)  2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)  3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2) அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2) Video:

உம்மாலே தான், என் இயேசுவே -Ummaale than en yesuve Lyrics

உம்மாலே தான் , என் இயேசுவே 1.உம்மாலே தான், என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து பூரிப்பேன்.   2.இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம்.   3.இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தந்தீர்; இக்கட்டு வரும்பொழுது, நீர் என்னைத் தேற்றுவீர்.   4.பூமியில் தங்கும் அளவும் உம்மையே பற்றுவேன்; எவ்வேளையும் எவ்விடமும் நான் உம்மைப் போற்றுவேன்.

உம்பாதம் பணிந்தேன் -Um paatham panithen Lyrics

உம் பாதம் பணிந்தேன் உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே  உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா  உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!   1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே  தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!   2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்  நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!   3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்  திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்   4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்  உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!   5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க  கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!   6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே  நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!   7. சீருடனே பேருடனே சிறந்த...

உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே -Um raajyam varungaalai karthare Lyrics

உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே 1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.   2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே. நம் பெலனற்ற கையை நீட்டினார். முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.   3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு, “இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்” என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

உம் சித்தம் போல் -Um sittham pol Lyrics

உம் சித்தம் போல்  உம் சித்தம் போல் என்னை என்றும் தற்பரனே நீர் நடத்தும் என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் என் பிரியனே என் இயேசுவே  1.திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன் மறு பிரயாண காலம் வரை பரனே உந்தன் திருசித்தத்தை அறிவதல்லோ தூயவழி  2.வழிப் பிரயாணி மூடனைப்போல் வழி தவரு நடந்திடவே வழி இதுவே என்று சொல்லும் இனிய சத்தம் தொனித்திடட்டும்  3.அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம் அடியார் மீது ஜொலித்திடட்டும் இரவு பகல்கூட நின்று என்றென்றுமாய் நடத்திடுமே  4.இடுக்கமே என் அப்பமுமாய் கண்ணீரோ என் தண்ணீருமாய் பருகிடினும் பயப்படேன் நான் என்றென்றும் உம் சித்தம் போதும்