Skip to main content

Posts

உம் அருள் பெற, இயேசுவே -Um Arul pera yesuve Lyrics

உம் அருள் பெற , இயேசுவே 1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,  என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.    2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,  நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.    3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,  என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.    4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,  நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.    5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,  மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.    6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,  உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்    7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,  ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

உன்றன் சுயமதியே -Unthan suyamathiye Lyrics

உன்றன் சுயமதியே உன்றன் சுயமதியே நெறி என்-று உகந்து சாயாதே; - அதில் நீ மகிழ்ந்து மாயாதே.  1. மைந்தனே, தேவ மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங் கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.  2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ, வந்து விளையுமே கேடு - அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.  3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் திட்ட மதாய் நடவாதே - தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.  4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே அவர் ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.  5. நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ மானிப்பது வெகு பாவம் - அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.

உன்னையே வெறுத்துவிட்டால் -Unnaiye veruthu vittaal Lyrics

உன்னையே வெறுத்துவிட்டால்  1. உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம். சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்  2. சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும். நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்.  3. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே  4. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்  5. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான். கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்  6. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம். இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே 

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் -Unnathamaanavarin uyar maraivil irukiravan Lyrics

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் 1. உன்னதமானவரின்  உயர் மறைவிலிருக்கிறவன்  சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்  இது பரம சிலாக்கியமே  அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே  தம் சிறகுகளால் மூடுவார்    2. தேவன் உன் அடைக்கலமே  என் கோட்டையும் அரணுமவர்  அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்  என் நம்பிக்கையும் அவரே    3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்  உன் பக்கம் விழுந்தாலும்  அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே  உன் தேவன் உன் தாபரமே    4. தேவன் உன் அடைக்கலமே  ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ  ஒரு வாதையும் உன் கூடாரத்தையே  அணுகாமலே காத்திடுவார்    5. உன் வழிகளிளெல்லாம்  உன்னைத் தூதர்கள் காத்திடுவார்  உன் பாதம் கல்லில் இடறாதபடி  தம் கரங்களில் ஏந்திடுவார்    6. ஆபத்திலும் அவரை நான்  நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்  என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே  என் ஆத்தும நேசரவர் 

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ -Un Nenjile undaana visarangalai ne Lyrics

உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ 1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.   2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள் உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.   3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.   4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும் ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும் ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம் வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் -Ungal Thukkam santhoshamai maarum Lyrics

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்   உங்கள் கவலைகள் கண்ணீர்  எல்லாம் மறைந்து விடும்  கலங்காதே மகனே, கலங்காதே மகளே  என் இயேசு கைவிட மாட்டார்    1. கடந்ததை நினைத்து கலங்காதே  நடந்ததை மறந்துவிடு  கர்த்தர் புதியன செய்திடுவார்  இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்    2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்  உடைந்த உள்ளம் தாங்குகிறார்  காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்  கண்ணீர் துடைகின்றார் - (உன்)    3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட  ஒருநாளும் விட மாட்டார்  தாங்கிடும் பெலன் தருவார்  தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)    4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்  விசுவாசம் காத்துக் கொள்வோம்  நீதியின் கிரீடம் நமக்கு உண்டு  நேசர் வருகையில் தந்திடுவார் - நம்    5. மாலையில் மகனே அழுகின்றாயா  காலையில் அக மகிழ்வாய்  நித்திய பேரானந்தம்  நேசரின் சமூகத்திலே    6. அக்கினியின் மேல் நடந்தாலும்  எரிந்து ப...

இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே -Israel ennum Naatinile Lyrics

இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே 1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே பெத்லகேம் என்னும் ஊரினிலே பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார் பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார் உன்னதத்தில் மகிமை பூமியிலே சமாதானம் மனுஷர் மேல் பிரியம் மனுஷர் மேல் பிரியம்   2. கன்னிமரியின் தாய்மையிலே தாவீது இராஜா வம்சத்திலே பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார் பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார் - உன்னதத்தில்   3. சத்திரத்தில் இடம் இல்லையே மெத்தையோ தொழுமுன்னணையே பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார் பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார் - உன்னதத்தில்