Skip to main content

Posts

Showing posts from September, 2013

எழுந்தார் இறைவன் - Ezunthaar iraivan song Lyrics

எழுந்தார் இறைவன் பல்லவி எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் சரணங்கள் 1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் - கெட்ட  ஆவியின் வல்லமையை அழிக்க - இப்  பூவின்மீது சபை செழிக்க --- எழுந்தார் 2. செத்தவர் மீண்டுமே பிழைக்க - உயர்  நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ பக்தர் யாவரும் களிக்க --- எழுந்தார் 3. விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத் தெழுந்து மனுக்குலத்தை மாற்ற - விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற --- எழுந்தார் 4. கருதிய காரியம் வாய்க்கத் - தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க - நம் இரு திறத்தாரையும் சேர்க்க --- எழுந்தார் Video:

சுந்தர பரம தேவ மைந்தன் - Sundara parama deva mainthan song lyrics

சுந்தர பரம தேவ மைந்தன் பல்லவி சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் ! அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந் சரணங்கள் பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே; வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த  மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே , கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்  கூடுங்கள் ;-பவத் துயர்  போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்  டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்  விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்  விந்தையாய் கிறிஸ்துவைப்  பணிந்து போற்றவே , மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்  வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே , அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்  டாடிட ,-அவர் பதம்  தேடிட ,-வெகு திரள்  கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்ற...