Skip to main content

Posts

Showing posts from November, 2012

துதித்து பாடிடுவோம் - Thuthitthu Paadiduvom Lyrics

துதித்து பாடிடுவோம்  துதித்து பாடிடுவோம் தாவீதை போல  நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2) எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு  தாவீது துதி செய்து நாளெல்லாம்  மகிழ்ந்தார்  -துதித்து பாடிடுவோம்  மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்  முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் -துதித்து பாடிடுவோம்  இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்  மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம்  -துதித்து பாடிடுவோம்  Video:

சிலுவையில் அறையுண்ட ஏசுவே - Siluvaiyil Araiyunda Yesuve Lyrics

சிலுவையில் அறையுண்ட ஏசுவே சிலுவையில் அறையுண்ட ஏசுவே உம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கின்றேன் ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே இவர்களை மன்னியும்  அறியாமல் செய்தார்கள் என்றீர்  மாறாத இரக்கத்தால் என்னை  மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே  ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே அம்மா இதோ உம் மகன் என்றீர்  இதுவும் தாய் என்றே நேசத்தால்  அன்னையின் அன்பினில் நாளுமே  என்னையும் வாழ்ந்திட செய்யுமே  ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே தாகமாய் உள்ளதே இறைவா  ஏன் என்னை கை விட்டீர் என்றீரே  கைவிடா நேசத்தால் எனக்கும்  பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே  ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே உமது கையில்  என் ஆவியை ஒப்படைக்கின்றே...