Skip to main content

Posts

அன்பான இறைவா பாவம் செய்தேன் -Anbana iraiva paavam seithen Lyrics

அன்பான இறைவா பாவம் செய்தேன் அன்பான இறைவா பாவம் செய்தேன் அன்பாய் மன்னிப்பீரே  அன்பின் மானிடரே பாவம் செய்தேன் அன்பாய் ஏற்பீரே - 2 1. கண்களால் பாவம் செய்தேன் - என்   சிந்தனையால் பாவம் செய்தேன் - 2   சொற்களால் பாவம் செய்தேன் - என்   செயல்களால் பாவம் செய்தேன் - 2 2. கடமை தவறி நான் பாவம் செய்தேன்   கருணை புரியாமல் பாவம் செய்தேன் - 2   நன்மை செய்யாமலும் பாவம் செய்தேன்   நன்மை செய்விடாமல் பாவம் செய்தேன் - 2 3. அம்மா மரியே நீர் மன்றாடுவீர்   தூயவரே தூதர்களே மன்றாடுவீர் - 2   மானிடரே நீவீர் மன்றாடுவீர்   இறை நோக்கி மன்றாடுவீர் - 2

அன்பு என்பது வல்லமை ஆக்கம் -Anbu enbathu vallamai aakkam Lyrics

அன்பு என்பது வல்லமை ஆக்கம் அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே  அர்த்தம் ஆகிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழுமே - 2 1. நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே - 2   தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே கனிந்ததே - 2   ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே   வாழும் தெய்வம் நம்மிலே நம்மிலே நம்மிலே 2. உயிர்கள் அனைத்தின் இயக்கமாய்   இயங்கும் உலகின் ஏக்கமாய் - 2   ஏங்கும் மனங்களின் இதயமாய்   அனைத்தின் நிறைவும் அன்புதான் - 2 ஆளவிடுங்கள்...

அன்பில் விளைந்த அமுதமே -Anbil vilaintha Amuthame Lyrics

அன்பில் விளைந்த அமுதமே என்னில்  அன்பில் விளைந்த அமுதமே என்னில் மலர்ந்த தெய்வமே  உயிரில் கலந்த ராகமே உறவில் எரியும் தீபமே - 2   தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே - 2 1. தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்   தலைவன் உனையே தேடவே - 2   தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம் தாகம் கொண்டு நாடவே   அணைத்துச் செல்லும் அன்னையாகி   அழைத்துச் சென்றாய் தெய்வமே   அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே - 2 2. கல்லும் முள்ளும் காடும் மலையும்   கடந்து செல்லும் வேளையில் - 2   பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து   வாழ்க்கைப் படகும் மூழ்கவே   சின்ன எனது இதயம் தனை நீ   சிறகில் அமர்த்தி விரைகிறாய் அன்பனே......

அன்பின் இறைவா வருக -Anbin Iraiva varuga Lyrics

அன்பின் இறைவா வருக அன்பின் இறைவா வருக விண் அமுதாய் நெஞ்சில் நிறைக - 2 1. உள்ளம் ஒன்றே வைத்திருந்தேன்   உமக்கே அதையும் திறக்கின்றேன்   வாழ்வது என்னில் நீராக வளர்வீர் நெஞ்சில் நினைவாக 2. உலகம் என்னில் உம்மைக் காண உவந்து வருவீர் நீரெம்மில்   விண்ணின் நினைவுச் சின்னங்களாய் விளங்க எம்மில் வாருமே 3. பிறப்பில் வந்தீர் உறவாக உம் பிரிவில் ஆனீர் உணவாக   மலையில் நின்றீர் பலியாக மறுமை நீரே பரிசாக

அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே-Anbai kondaadu enthan Nenjame Lyrics

  அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே    அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே  இந்த பூலோகம் உந்தன் சொந்தமே - 2   நீயில்லாமலே இந்த உலகம் நடக்கிறது   உன்னைக் கேட்காமலே இந்த இயற்கை வளர்கிறது   இந்த வானும் பூமியும் காற்றும் காலமும்   காசில்லாமல் வந்தது - 2   யார் தந்தது தெரியுமா சொல் மனமே இறைவன் - 3   ஒருவன் அவனே தலைவன் 1. வாழும் பல ஆயிரம் உயிர்களின்   இரகசியம் அணுவினில் அமைத்தது யார்   நாளும் வரும் ஆதவன் ஒளியினில்   அகிலமும் வாழ்ந்திட அமைத்தது யார்   காற்று நடனமிடும் நாற்று உயிரளிக்கும் ஊற்று என் மனம்   பாட்டு பல கலைகள் அழகு வான்மழையின் அமுது என் மனம்   உலகெங்குமே உயிராற்றல்கள்   நீ உணர்ந்திடு உள்ளம் ஒளி பெறும் யார் தந்தது.... 2. விதையில் பெரும் விருட்சமும் அடங்கிடும்   அதிசயம் அமைத்தது யாரறிவு   மண்ணில் பல மகத்துவம் மனிதனும்   படைத்திட அமைத்தது யாரறிவு   மாசு நிறை உலகில் கேட்கும் மனக்குரலின் சாட்சி என் மனம்   பாசம் மனிதகுல நே...

அன்பென்ற நதி மீது படகாகு-Anbentra Nathi Meethu Padagaagu Lyrics

அன்பென்ற நதி மீது படகாகு   அன்பென்ற நதி மீது படகாகு  அறியாத பேரின்ப கரை சேர்க்கும்   அன்பென்ற வில்லின் முன் இலக்காகு   அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும் - 2 1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்   துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு   உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்   தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு   நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்   பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு - 2   அன்புக்கு ஈர்க்கின்ற மனம் உண்டு   இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு - 2 2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை   மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை   தானே தன் கனி உண்ணும் செடியில்லை   தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை   இளகாத மனம் செய்த பணியில்லை   இரங்காத இதயத்தில் இறையில்லை - 2   தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்   அன்புள்ளம் இறை தந்த வரமாகும் - 2

அன்பே அன்பே இறைவன் -Anbe anbe iraivan Lyrics

அன்பே அன்பே இறைவன்   அன்பே அன்பே இறைவன்  அன்பே உலகின் ஒளியாகும்   அன்பே மாந்தரின் நிறைவாழ்வு   அன்பென்னும் சக்தி நீ அகம் பெறும் நிம்மதி உள்றும் பேரமைதி - 2   கண்காணும் மகிழ்வாய் மண்மீது நிலவாய்   என் வாழ்வில் எதிர்வந்த பேரொளி நீ   நெஞ்சம் அமிழ்கின்ற அமுதான அன்பு - என்றும்   திளைத்தாலும் தெவிட்டாத அன்பு   முழு நாளும் நிறைகின்ற அன்பு அன்பு அன்பு பேரன்பு 1. தண்குளிர் ஓடையாய் என்மனம் பாய்கிறாய் நன்னிலம் ஆகிறேன் - 2   நன்னிலம் ஆனபின் என் கனி கேட்கிறாய்   என்ன நான் செய்கிறேன் - 2   அன்புக்கு பதில் கூறும் ஆற்றலைத் தா   அன்போடு இணைகின்ற தியாகத்தை தா - 2 நெஞ்சம்... 2. என் திறன் காண்கிறாய் என் துயர் தீர்க்கிறாய்   என் பலமாகிறாய் - 2   என் பலமானபின் என் பணி கேட்கிறாய்   என்ன நான் ஆகிறேன் - 2   அன்புக்கு பலம் கூட வாழ்ந்திட வா   அன்பென்றால் இதுவென்று காட்டிட வா - 2 நெஞ்சம்...