Skip to main content

Posts

அருட்கனியே என் அகநிலவே - என் இருளினை நீக்கிட வா -Arutkaniye en aga nilave Lyrics

அருட்கனியே என் அகநிலவே அருட்கனியே என் அகநிலவே - என் இருளினை நீக்கிட வா  அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா 1. ஆயிரம் வாழ்த்தொலிகள் - உன்னை ஆராதனை செய்யும் தீபங்களோ ஆனந்தம் பொழிந்திட வா - இன்ப ஆறுதல் மொழிந்திட வா - இறைவா 2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல் என் வாழ்வு நன்றாகுமோ ஆலயம் வாழ்பவனே உள்ள ஆறுதல் அளித்திட வா - இறைவா 3. காலமென்னும் கடலில் எம் வாழ்வென்னும் படகு நீயன்றோ வாழ்க்கையின் வழியே வா எம் வாழ்க்கை மலர்ந்திட வா - இறைவா 4. கலங்கரைச் சுடரே வா நல் காலங்கள் உருவாக்கும் தென்றலே வா நிலவிடும் அகவிருளை உன் ஒளியால் நீக்கிடவா - இறைவா

அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா - Arulpozhi annale vaa inbam tharum Lyrics

அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா அருள்பொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா  என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே - 2 1. தென்றல் இன்பம் திளைத்திடும் விண்ணிலவின் தண்ணொளி போல் இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கி வா இன்பம் தரும் இயேசு நாதா என் உள்ளத்தின் அன்பைக் கவர்ந்த ராஜனே - 2 2. இன்றலர்ந்த மல்லிகை போல் நறுமணம் வீசிடவே அள்ளி எனை அணைத்திட வந்திடுவாய் விண்ணமுதே இன்பம்... 3. துன்பம் பல சூழ்ந்திடவே உன்னையே நான் நாடி நிற்க தட்டி எனைத் தேற்ற வாராய் விண்ணவரின் போஜனமே இன்பம்...

அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா - Arul vadive aanandhame varam ontru tharuvaaya Lyrics

அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா  அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா  திருவிருந்தே அருமருந்தே அருகினில் வருவாயா ஒருகணம் உனையழைத்தேன் நீ என் மனம் அமர்வாயா என்னகம் நீ அமர்ந்து நீ ஒளிதனை பொழிவாயா வழியாக வாழ்வாக வா 1. ஆகாயம் போன்ற உள்ளம் உன்னிடம் பார்க்கிறேன் மடைதிறந்த வெள்ளம் போல உன் முகமே பார்க்கிறேன் மலைபோன்ற உந்தன் உள்ளம் மன்னிக்க கேட்கிறேன் தாய்மைக்கும் மேலாம் உந்தன் அன்பிதயம் கேட்கிறேன் எனக்கினி ஏதும் இல்லை நீதானே என் எல்லை - 2 அடைவேனே உன்னை 2. ஊதாரி மைந்தன் என்னை மன்னித்து ஏற்கிறாய் வழிமாறிப் போன என்னை கரம் ஏந்தி காக்கிறாய் புகைவந்த சுடராய் என்னை மலைமீது ஏற்றினாய் புறந்தள்ளி ஒதுக்கிய என்னை மூலைக்கல் ஆக்கினாய் இனி உனக்காக வாழ்வேன் இகமதை நானும் வெல்வேன் - 2 உயிர்ப்பேனே உன்னில்

அருளே எம்மில் வாழ்வு தந்த அருளே - Arule emmil vaazhvu thantha Lyrics

அருளே எம்மில் வாழ்வு தந்த அருளே அருளே எம்மில் வாழ்வு தந்த அருளே  மகிழ்வே எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்வே வாழும் ஒரு தெய்வம் எமைத் தேடி வந்தது பாதை அது காட்டி நின்று முன் நடந்தது உள்நிறைந்து உலகளந்து உயிர் கொடுத்தது 1. ஞாலம் கண் காணுகின்ற வடிவெடுத்தது எங்களோடு தெய்வம் வாழ்தல் உண்மையானது வாழும் வழி தந்து உடன் துணையளித்தது வழியமைத்தது உண்மை உயிர் கொடுத்தது நிலமெனும் வீட்டில் நிலையொளி வந்தது மனமென்னும் தோட்டம் அமைதியைக் கொண்டது நீதியின் ஆதவன் மகிழ்வோடு உதித்தது 2. ஏழ்மை ஒரு சாபம் என்ற எண்ணம் போனது தாழ்ந்தவரை உயர்த்தி தெய்வம் கருணை செய்தது பெண்மை சமம் இல்லை என்ற நிலையும் ஓய்ந்தது விடிவு வந்தது அடிமை நிலை முடிந்தது விடுதலை வேட்கை எங்கும் எழுந்தது துயர்களைத் தாங்கும் துணிவு பிறந்தது தடைகளைத் தகர்த்திடும் நம் காலம் விடிந்தது

உம்மை போல நல்ல தேவன் - There is no one like you Oh Lord Lyrics

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே  உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட  உம்மை போல என்னை தேற்றிட  யாரும் இல்லையே  ஏசையா யாரும் இல்லையே  உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன்...(3) -என் தெய்வமே  உம்மை நான் போற்றுகிறேன்...வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்... என் தெய்வமே....என் ஏசுவே...என் தெய்வமே  என் தெய்வமே (2)   There is no one like you Oh Lord  No one like you Lord (4) There is no one  To Save me Lord There is no one  To Take me Lord There is no one To Heel me Lord I praise your Holy name,Mighty Name,Precious name... Oh my lord! (2) I praise your Holy name,Mighty Name,Precious name... Oh my lord!...O h my God! There is none like You None Like you(2) Video:

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை - Um siragugal Nizhalil Lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா  அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்  தணலிலும் மனம் குளிரும் - உந்தன்  கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை  காத்திடு என் இறைவா 1.பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்  மன்னிப்பில் பனிபோல் கரையும்  கருணையின் மழையில் நனைந்தால் உன்  ஆலயம் புனிதம் அருளும் 2.வலையினில் விழுகின்ற பறவை - அன்று  இழந்தது அழகிய சிறகை  வானதன் அருள்மழை பொழிந்தே நீ  வளர்த்திடு அன்பதன் உறவை  Video:

இறைவா நீ ஒரு சங்கீதம் - Iraivaa ne oru sangeetham Lyrics

இறைவா நீ ஒரு சங்கீதம் இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்   இணைந்தே பாடிடும் என் கீதம்   உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்   என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை 1. புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்   இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2   பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்   பாடலால் என்னகம் இணைந்திடுமே   எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்   எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா   காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி   வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2 2. கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ   தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2   நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை   நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்   தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்   தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்   அருளாளன் நீயின்றி அழகேது என்னில்   அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2 Video: