Skip to main content

Posts

Showing posts from October, 2012

Tamil Bible Verse Wallpaper 4

Tamil Bible Verse Wallpaper 4 "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.-I தீமோத்தேயு 6:10" "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். - I தீமோத்தேயு 1:15" "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.- எபேசியர் 6:10" "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.- மத்தேயு 6:33" "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். - கலாத்தியர் 3:28" "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவை...

Tamil Bible Verse Wallpaper 1

Tamil Bible Verse Wallpaper 1 "அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.- வெளி 22:11,12" "மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.-I கொரிந்தியர் 9:27" "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.-I கொரிந்தியர் 15:57" "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.-II கொரிந்தியர் 2:14" "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராம ல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.-II கொரிந்தியர் 10:4" "கிறிஸ்து...

வார வாரம் வந்து போகும் - Vaara Vaaram Lyrics

குதூகலம் நிறைந்த நன்னாள் - Kudukalam Niraintha Lyrics

குதூகலம் நிறைந்த நன்னாள் குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம் 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம் 5. தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம் Video:

ஜீவனுள்ள தேவனை - Jeevanulla Devanai Lyrics

என் கிருபை உன்னை - En Kirubai Unnai Lyrics

அன்பில் என்னை பரிசுத்தனாக்க - Anbil ennai parisutthanaakka Lyrics

அன்பில் என்னை பரிசுத்தனாக்க     1 . அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன்-(2) 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர – என் 4. வருங்காலங்களில் முதற்பேராய் நீர் இருக்க நாம் சோதரராய் உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என் 5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே நான் எப்படி பதில் செய்குவேன் உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட என்னை தந்தேன் நடத்திடுமே – என் Video:

உன்னதங்களிலே இறைவனுக்கு - Unnathangalile Iraivanukku Lyrics

உன்னதங்களிலே இறைவனுக்கு உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக! உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக! புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே! உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம். உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம். ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே! ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்தேவ தந்தை இறைவனே! ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே! ஆண்டவராம் எம் இறைவனே! இறைவனின் திருச் செம்மறியே! தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர்! உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம்மீது இரங்குவீர்! உலகின் பாவம் போக்குபவரே, எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்! தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே, நீர் எம்மீது இரங்குவீர்! ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்! நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்! பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் மாட்சியில் உள்ளவர் நீரே. - ஆமென்!